பாகிஸ்தானின் ஜியோ டி.வி , நாட்டின் முக்கிய உளவுத்துறை நிறுவனத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை ஒலிபரப்பியதை அடுத்து, இந்த நடவடிக்கை வருகிறது.
இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது, தவறாகப் புரிந்துகொள்ளப் படக்கூடியது என்று ஐ.எஸ்.ஐ கூறியிருந்தது.
ஜியோ டி.வியை முடக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை பாகிஸ்தானின் சிவிலியன் மற்றும் ராணுவத் தலைவர்களுக்கிடையே முறுகல் நிலையை அதிகரிக்கும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், பாகிஸ்தானின் மின்னணு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான, பெம்ராவுக்கு தற்போது தலைவர் இல்லதா நிலையில், இது குறித்து முடிவெடுக்க அது சற்று கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்று நோக்கர்கள் கூறுகின்றன
BBC -
0 comments:
Post a Comment