• Latest News

    June 20, 2014

    கல்முனையில் கண்டன பேரணி

    எம்.வை.அமீர்;
    அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதலைக் கண்டித்து பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்திருந்த கண்டம் தெரிவிக்கும் பேரணி இன்று கல்முகைக்குடி முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.

     அமைதியான முறையில் இடம்பெற்ற இக்கண்டன பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நியாயம் வழங்க வேண்டும். பொதுபலசேனாவை தடை செய்ய வேண்டும். இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற சுலோகங்களை காணக்கூடியதாக இருந்தது.
    பெருந்திரலான இளைஞர்களும்,  பொதுமக்களும் கலந்து கொண்ட இப்பேரணியில் கல்முனை அரசியல்வாதிகள் என்ற ரீதியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்வும்  கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனையில் கண்டன பேரணி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top