• Latest News

    June 19, 2014

    வியங்களை பிரதேசத்தில் பதற்றம்

    வியங்களை பிரதேசத்தில் பதற்ற  நிலவுவதாகவும்  முஸ்லிம் வீடுகளை தாக்குவதற்கு இனவாத கும்பல் முயற்சிப்பதாகவும்  இந்த முயற்சியை தடுக்க படையினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் 
    தெரிவிக்கப் படுகிறது.

    அதேவேளை பாணந்துறை பகுதியில் நேற்றிவு ஒரு கும்பல் நடமாடியதால் பொலிசாருக்கு அறிவிக்கப் பட்டு போலிஸ் சார் காவலில் நிறுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

    இன்று பிற்பகல் பதுளையில் நடைபெறவிருந்த மற்றொரு முஸ்லீம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை  பதுளை நீதிமன்றம் தடைசெய்துள்ளது. இந்த முஸ்லிம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சிங்கள இனவாத அமைப்புகளான பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

    நாட்டில் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதவான் தடை விதித்துள்ளதாக பிரதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வியங்களை பிரதேசத்தில் பதற்றம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top