• Latest News

    June 20, 2014

    குருந்துகொல்லை ஜும்ஆ பள்ளிவாசலின் மீது தாக்குதல் !

    கண்டி, குருந்துகொல்லை பிரதேசத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலின் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தாக்குதலை மேற்கொண்டவர்கள் கற்களை வீசி பள்ளிவாயிலின் கண்ணாடி ஜன்னல்களையும், உடைத்துள்ளனர்.தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்து பிரதேச வாசிகள் திரண்டு வந்த நிலையில், தாக்கியவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டதாக தெரியவந்துள்ளது.

    சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிசார் ஸ்தலத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பிரதேசத்தின் அமைதி நிலையை பேணுவதில் முஸ்லிம்கல்  பொலிசாருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    அதேவேளை இன்று ஜும்ஆ தினம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் பொலிசாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குருந்துகொல்லை ஜும்ஆ பள்ளிவாசலின் மீது தாக்குதல் ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top