• Latest News

    July 01, 2014

    யார் இவர்? ஐ நா மனித உரிமைகள் அமைப்பின் புதிய தலைவர் ஜோர்டான் நாட்டின் இளவரசர் சயீத் ராட் ஹுசேன்.

    ஐ நா மனித உரிமைகள் அமைப்பின் புதிய தலைவராக ஜோர்டான் நாட்டின் இளவரசர் திரு. சயீத் ராட் ஹுசேன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    ஆசியாவிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் குழுவிற்கு தலைமையேற்கப் போகும் முதலாவது நபரும் முதலாவது இஸ்லாமியரம் ஆவார்.

    ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் சகோதரரான இவர் இத மனித உரிமைகளை மீட்டெடுப்பதிலும் காப்பதிலும் தகுதி வாய்ந்த சிறந்த இளைஞராகவும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவராக மூன்றாண்டுகள் திறம்பட பணியாற்றி பல்வேறு பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றார். மற்றும் மனிதத்திற்கெதிரான இனப்படுகொலைகளை எதிர்த்து தடுக்கும் விசாரணை மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
    மேலும் பன்னாட்டு போர்க்குற்ற விசாரணைக்குழுவின் தலைவராக வீற்றிருந்து காங்கோ மற்றும் சிரியாவில் அமெரிக்க படைகளின் அட்டூழியத்தை படம்பிடித்துக்காட்டி ஐநாவுக்கே எதிராக குரல் கொடுத்து  அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

     தான் அடுத்த தலைவராக தெரிவு செய்யப்பட்டதை 193 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றில் அறிவித்துவிட்டு 'என்னை தெரிவு செய்ததற்காக இன்று கைதட்டும் நீங்களே என் நடவடிக்கைகளைக்கண்டு நாளை கல்லெரியக்கூடும் என்பதை தெரிந்தே என் நகர்வுகளை முன்னெடுக்கப்போகிறேன்' என்று அறிவித்திருக்கின்றார்.


    இதற்கிடையில் போர்க்குற்ற விசாரணைகளுக்காக நவநீதம் பிள்ளை நிதி ஒதுக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த ராஜபக்சே வுக்கு அடுத்த தலைவலியாக ஜோர்டான் இளவரசரின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

    நவநீதம் பிள்ளை ஒய்வு பெறுவதற்குள் நிதி ஒதுக்காவிட்டால், பின்னர் இளவரசர் வந்து நிதி ஒதுக்கீடு செய்வதற்குள் அவரது பதவிக்காலமே முடிந்துவிடும் என்பதை  நன்கு உணர்ந்துள்ள நவநீதம்  பிள்ளை, முதல் வேளையாக இம்மாத இறுதிக்குள் நிதி ஒதுக்கீடு செய்யவிருப்பதாக அறிவித்ததும் மஹிந்த ராஜபக்ஷ வயிற்றில் புளியைக் கரைதிருக்கிறது.

    எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல், அடுத்த தலைவர் இளவரசர் தான் என்பதை அறிந்து கொண்ட ராஜபக்சே கடந்த ஜனவரியில் ஜோர்டானுக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொண்டு எப்படியாவது இளவரசரோடு நண்பராகிவிட வேண்டும் என்று பலமாக முயற்சி செய்தபோது, ' நீங்கள் மனித் உரிமைகளுக்கு எதிரானவராக குற்றம் சாட்டபட்டிருக்கிறீர்கள், உங்கள் அரசின் மேல் போர்க்குற்றச்சாட்டு, இனப்படுகொலைக்கான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் சரியான விடைகிடைக்கும் வரை உங்களை சந்திக்க எனக்கு விருப்பமில்லை' என முகத்திலடித்தாற்போல் கூறி,  கடைசிவரை சந்திக்கமலேயே திருப்பி அனுப்பிவிட்டார் ஜோர்தான் இளவரசர்.
     
    இத்தனைக்கும் ராஜபக்சே ஜோர்டானின் மன்னரைக்கூட சந்தித்து விட்டார் என்பது கூடுதல் தகவல். நவநீதம்பிள்ளை நிதி ஒதுக்கீடு செய்துவிட்டால், ஐநா குழு விசாரணையை துவக்கிவிடும், அவ்வாறு துவங்கும் நேரத்தில் ஐநாமனித உரிமைகள் கழகத்தின் தலைவராக இளவரசர் வந்தால் .. இதுவே ராஜபக்சே கலக்கத்திற்கு காரணம்..
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யார் இவர்? ஐ நா மனித உரிமைகள் அமைப்பின் புதிய தலைவர் ஜோர்டான் நாட்டின் இளவரசர் சயீத் ராட் ஹுசேன். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top