மூன்று பில்லியன் ரூபா முதலீடுகளுடன் இன்று இலங்கை வரும் சீனா ஜனாதிபதிக்கு இன்று கொழும்பில் கோலாகல வரவேற்பளிக்கப்படவுள்ளன.
இதேவேளை, ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுதல்,
கலாசார நிலையம் ஒன்றிற்காக நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்தல்,
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் செயற் றிட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து
வைத்தல் ஆகிய அம்சங்கள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே முன்னடுக்கப்பட
விருப்பதாகவும் தெரியவருகிறது.