• Latest News

    September 02, 2014

    சபீய்யா என்ற தனது 6 வயது மகளை அடித்தே கொன்ற தாய் !!- பொலிசார் தகவல்

    crimeஎம்.எப்.எம்.பஸீர்: தனது ஆறு வய­தான மகளை இளம் தாயொ­ருவர் அடித்தே கொலை செய்­துள்ள சம்­பவம் ஒன்று கொழும்பின் புறநகர் பகு­தி­யான வெல்­லம்­பிட்­டிய பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. நேற்று முன்தினம் காலை 9.35 மணிக்கு
    பொரளைஇ லேடி றிஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையின் பொலி­ஸா­ரினால் வெல்­லம்­பிட்­டிய பொலி­ஸா­ருக்கு
    வழங்­கப்­பட்ட தகவல் ஒன்றின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த கொடூர சம்­பவம் வெளிச்­சத்­துக்கு வந்­த­தா­கவும் சந்­தே­கத்தின் பேரில் 29 வய­து­டைய தாயை பொலிஸார் கைது செய்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண  குறிப்­பிட்டார்.

    வெல்­லம்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நாக­முல்ல வீதி, கொலன்­னாவ என்ற முக­வ­ரியில் வசித்து வந்த பாத்­திமா சபீய்யா என்ற ஆறு வய­தான குழந்­தையே இவ்­வாறு தனது தாயினால் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

    நேற்று முன் தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை கழுத்து நெரிக்­கப்­பட்டு தாக்­கு­த­லுக்கு உள்­ளான நிலையில் ஆறு வய­தான பெண் குழந்தை பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையில் உயி­ரி­ழந்­துள்­ளது. இதனை அடுத்து அது தொடர்­பி­லான தகவல் வெல்­லம்­பிட்­டிய பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­ப­டவே விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் அந்த சிறு­மியின் கொலை தொடர்பில் 29 வய­தான இளம் தாயை கைது செய்­துள்­ளனர்.

    அத்­துடன் சிறு­மியின் 7 வயது நிரம்­பிய சகோ­த­ர­னிடம் விஷேட வாக்கு மூலம் ஒன்­றி­னையும் அவர்கள் பதிவு செய்­துள்­ளனர்.

    தாய் அந்த ஆறு வயது சிறு­மியை தாக்­கு­வதை அப்­போது அவ்­வீட்டில் இருந்­துள்ள 7 வய­தான சகோ­தரன் நேரில் கண்­டுள்­ளதை அடுத்தே அவ­ரிடம் வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­ட­தாக வெல்­லம்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் சிரேஷ்ட அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு குறிப்­பிட்டார்.

    இந் நிலையில் தனது தாய்,  தங்­கையின் கழுத்தை நெரித்து கைகால்­களால் தாறு மாறாக தங்­கையை தாக்­கி­ய­தாக சம்­ப­வத்தை நேரில் பார்த்த 7 வயது சிறு­வனின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண கேச­ரி­யிடம் சுட்­டிக்­காட்­டினார்.
    வெல்­லம்­பிட்­டிய பொலிஸார் மேற்­கொண்­டுள்ள ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களில், பாத்­திமா சபீய்யா என்ற ஆறு வயது சிறுமி வீட்­டினுள் மல­சலம் கழித்­த­மை­யி­னா­லேயே அவ­ரது தாயினால் இவ்­வாறு கண்­மூ­டித்­த­ன­மாக தாக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

    இறந்த சிறுமி வீட்­டினுள் சிறு நீர் கழித்­த­தாக கூறி முதலில் தாயினால் பல­மாக தாக்­கப்­பட்­டுள்ளார். இதனால் அந்த சிறுமி வீட்டின் படிக்­கட்டு ஒன்றில் இடறி விழுந்­துள்ளாள். அப்­போது அந்த சிறு­மியின் கழுத்தை நெரித்­துள்ள தாய் மீண்டும் தாக்­குதல் நடத்­தி­யுள்ளார். இது தொடர்பில் இறந்த சிறு­மியின் சகோ­தரன் விரி­வான வாக்கு மூலம் ஒன்றை வெல்­லம்­பிட்­டிய பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யுள்­ள­தாக சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர்  தெரி­வித்தார்.

    குறித்த தாய் இதற்கு முன்னர் பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் அந்த சிறு­மியின் மர்­மஸ்­தானப் பகு­தியை தீயினால் சுட்டு காயம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை தொடர்­பிலும் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அந்த பொலிஸ் அதி­காரி மேலும் குறிப்­பிட்டார்.
    அவ்­வ­றான தீ காயங்­களை இறந்த சிறு­மியின் குறித்த பிர­தே­சங்கள் அவ­தா­னிக்க முடி­வ­தா­கவும் அவர் இதன் போது சுட்­டிக்­காட்­டினார்.

    இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சிறுமியின் பெற்றோர் ஏற்கனவே விவாகரத்தாகி மீண்டும் ஒன்று சேர்ந்தவர்கள் என தெரிவிக்கும் பொலிஸார் தாயை தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்.- வீரகேசரி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சபீய்யா என்ற தனது 6 வயது மகளை அடித்தே கொன்ற தாய் !!- பொலிசார் தகவல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top