• Latest News

    September 02, 2014

    பான் கீ மூன் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது -ஞான­சாரர்

    12
    இலங்­கையில் பௌத்­தர்­க­ளுக்கும் இந்­துக்­க­ளுக்கும் எதி­ராகத் தலை­தூக்­கி­யுள்ள முஸ்லிம் பயங்­க­ர­வாதம் தொடர்பில் கண்­களை மூடிக் கொண்டு, உலகில் பௌத்த பயங்­க­ர­வாதம் தலை­தூக்கி வரு­வ­தாக ஐ.நா.செய­லாளர் நாயகம் பான் கீ மூன் தெரி­வித்த கருத்­தா­னது கவ­லைக்­கு­ரி­ய­தாகும் எனத் தெரி­வித்த பெளத்த கடும்போக்கு அமைப்பான பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் இலங்­கையில் பௌத்­தர்­களின் பயங்­க­ர­வாதம் கிடை­யாது என்றும் தெரி­வித்துள்ளார் .

    இது தொடர்­பாக கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேலும் தெரி­விக்­கையில், ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன் பொறுப்­பான பதவி வகிப்­பவர். அவ்­வா­றா­னவர் பொறுப்­பற்ற ரீதியில் கருத்­துக்­களை வெளி­யி­டக்­கூ­டாது. எதை­யா­வது கூற வேண்­டு­மானால் சிந்­தித்து புத்திக் கூர்­மை­யுடன் தெரி­விக்க வேண்டும்.

    உலகில் பௌத்த பயங்­க­ர­வாதம் தலை­தூக்கி வரு­வ­தா­கவும் இலங்­கையில் இவ்­வா­றான பௌத்த பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கி­யுள்­ள­தோடு சிறு­பான்மை இன மதங்கள் ஒடுக்­கப்­ப­டு­வ­தா­கவும் ஐ.நா. செய­லாளர் நாயகம் தெரி­வித்த கருத்து கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

    இலங்­கையில் பௌத்த பயங்­க­ர­வாதம் கிடை­யாது மாறாக முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தமும் பயங்­க­ர­வா­தமும் சேர்ந்து பௌத்த இந்த மதங்­களை ஒழிப்­ப­தற்­கான சதித்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­றது. ஆனால் நாம் இந்­துக்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு அம் மதத்தை பாது­காக்கும் திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்றோம்.

    உல­கமே இன்று முஸ்லிம் பயங்­க­ர­வா­தத்­தினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது. எங்கும் பௌத்த பயங்­க­ர­வாதம் இல்லை. பௌத்தர்கள் அஹிம்சையை கடைப்பிடிப்பவர்கள். பயங்கரவாதிகள் அல்ல என்பதை ஐ.நா.செயலாளர் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரி­வித்துள்ளார் .-TC
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பான் கீ மூன் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது -ஞான­சாரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top