• Latest News

    September 16, 2014

    கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் தலைவர் தினம்

     எம்.ஐ.எம்.அஸ்ஹர்:மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 14 வது ஞாபகார்த்த தின நிகழ்வுகள் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இன்று கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் இடம்பெற்றது.

    திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் , கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல் , சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான் , பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் நிலஅளவையாளர் எம்.ஏ.றபீக் , பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியயலாளர் அஸ்லம் சஜா , பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    கல்லூரியின் மஹிந்தோதய தொழில்நுட்ப கூடத்தின் முன்னால் அதிதிகளினால் நினைவு தின மரம்கள் நட்டி வைக்கப்பட்டதுடன் ,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் சுமார் 10 இலட்சம் ருபா செலவில்கல்லூரியின் எம்.எஸ்.காரியப்பர் மண்டப புனருத்தான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் ஞாபகார்த்த உரையும் துவாப் பிரார்த்தனையும் இடம்பெற்றது. 
    Displaying leader 01.jpg
    Displaying leader 2.jpg 
    Displaying leader 4.jpg
    Displaying leader 7.jpg 
    Displaying leader 8.jpg 
    Displaying leader 9.jpg
    Displaying leader 12.jpg 
     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் தலைவர் தினம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top