• Latest News

    September 20, 2014

    நள்ளிரவுக்கு முதல் முதலாவது முடிவு வௌியாகும் - மஹிந்த தேசப்பிரிய

    ஊவா மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி நிறைவு பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

    வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் இன்று நள்ளிரவுக்கு முதல் முதலாவது தபால் மூல வாக்கெடுப்பு முடிவு வௌியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    தேர்தல் நீதியானதாகவும் நியாயமானதாகவும் இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை, நடந்து முடிந்த ஊவா தேர்தல் வாக்களிப்பின் முடிவில் பதுளை மாவட்டத்தில் 68% மக்களும் மொனராகலை மாவட்டத்தில் 73% மக்களும் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் செயலகம் ஊவா தேர்தலில் சராசரியாக 65% வாக்களிப்பு பதிவாகியுள்ளதென அறிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நள்ளிரவுக்கு முதல் முதலாவது முடிவு வௌியாகும் - மஹிந்த தேசப்பிரிய Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top