மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றங்கள் தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் அதன் தலைவர் சட்டத்தரணி வினோபா இந்திரன், செயலாளர் சட்டத்தரணி ஆர். கண்ணன் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை (26) முற்பகல் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க பிரதிநிதிகள் அதன் தலைவர் சட்டத்தரணி வினோபா இந்திரன், செயலாளர் சட்டத்தரணி ஆர். கண்ணன் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை (26) முற்பகல் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.
அமைச்சின் செயலாளர் திருமதி. கமலினி டி சில்வா, சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ..கே.டி.டி.டி. அரந்தர, அமைச்சின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
நீதி அமைச்சரை சந்தித்த மட்டக்களப்பு சட்டத்தரணி சங்க தூதுக்குழுவில் சட்டத்தரணிகளான எஸ்.எம். முகம்மது அமீன், பி. பிரேம்நாத், எஸ். சுலோஜன், கே. நாராயணபிள்ளை ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
0 comments:
Post a Comment