• Latest News

    October 26, 2014

    பட்ஜெட்டில் துண்டுவிழும் தொகை அதிகரிப்பு! முஸ்லிம் காங்­கி­ரஸ் எச்சரிக்கை

    2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் பாரிய பொருளாதார அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என முஸ்லிம் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.

    ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ. ஹசன் அலி கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் குறிப்பிடுகையில்,

    வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிவாரணங்கள் கவர்ச்சிகரமாக இருந்த போதும் வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் துண்டு விழும் தொகை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துக் காணப்படுகிறது.

    இதனால் மக்கள் பாரிய பொருளாதார அழுத்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பட்ஜெட்டில் துண்டுவிழும் தொகை அதிகரிப்பு! முஸ்லிம் காங்­கி­ரஸ் எச்சரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top