• Latest News

    October 04, 2014

    இரவில் நாய் உறங்கிய இடத்தில் மீன் விற்பனை

    நிந்தவூர் மீன் சந்தை அடைக்கப்படாது திறந்த வெளியாக காணப்படுகின்றது. இதனால், இரவு வேலைகளில் நாய்களின் உறைவிடமாக இருக்கின்றது. மீன் வியாபாரிகள் மீன்களை பொலிதீன் பைகளின் மேல் கொட்டியே மீன் விற்க வேண்டும். இதனைச் அவர்களில் ஒரு சிலர் மாத்திரமே செய்கின்றார்கள்.

    இரவில் நாய் உறங்கிய இடத்தில் மீனை கொட்டி விற்கின்றார்கள். நாம் வாங்குகின்றோம். எனவே, மீன் சந்தை வலைக் கம்பியினால் அடைக்கப்பட
    வேண்டும். மீன் வியாபாரிகள் பொலிதீனில் மீனை கொட்டி விற்க வேண்டும். இது விடயத்தில் நிந்தவூர் பிரதேச சபை கூடிய கவனம் செலுத்த வேண்டும். நிந்தவூர் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களும், அவர்களின் அலுவலகமும் கவனம் செலுத்துதல் அவசியமாகும். சுத்தமான உணவுதான் சுகத்தை தரும்.
    இவ்விடயத்தில் நாம் அவதானத்தில் இருப்போம்.









    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இரவில் நாய் உறங்கிய இடத்தில் மீன் விற்பனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top