• Latest News

    October 15, 2014

    சம்மாந்துறை வலயத்தில் கா. பொ. த. உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில்

    துறையூர்ஏ.கே.மிஸ்பாஹுல்ஹக்: கா. பொ. த. உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வலயத்தில் இருந்து 103 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அம் மாணவர்களுக்காக புலமைப்பரிசில் வழங்கும் விழா 15. 10. 2014 ம் திகதி இன்று சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் வலயக் கல்வி பணிப்பாளர் எம். எஸ். எஸ் நஜீம் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளருமாகிய அல் - ஹாஜ் ஏ. எம். எம் நௌஷாட் அவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம். எல். ஏ அமீர் உட்பட சம்மாந்துறை உதவி வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டு ஒரு மாணவருக்கு ஒதுக்கப்பட்ட 12 000 ரூபாய் ஜனாதிபதி புலமைப்பரிசில் இருந்து 6 000 ரூபாய் வீதம் 103 மாணவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டது.





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறை வலயத்தில் கா. பொ. த. உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top