• Latest News

    October 11, 2014

    ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? நவம்பர் மாதம் அறிவிப்போம் : ஹக்கீம்

    எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்று இது­வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தீர்­மா­னிக்­க­வில்லை. இது தொடர்பில் கட்­சியின் அனைத்து மட்­டங்­க­ளிலும் கலந்­தாராய்ந்து­ வ­ரு­கின்றோம் என்று முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் நீதி­ய­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்

    கட்­சியின் அனைத்து மட்­டங்­க­ளிலும் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­விட்டே ஜனா­தி­பதி தேர்­தலில் யாருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்ற தீர்­மா­னத்­துக்கு வரமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

    கொழும்பில் நேற்­றுக்­காலை இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்­து­கொண்­டி­ருந்த நீதி­ய­மைச்சர் ரவூப் ஹக்கீம் நிகழ்வின் இறு­தியில் கேச­ரி­யிடம் தகவல் வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறியுள்ளார் .

    ” முதலில் தற்­போது ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­று­வ­தற்கே எங்­க­ளுக்கு பூரண உடன்­பா­டில்லை. தற்­போ­தைய நிலை­மையில் முதலில் பாரா­ளு­மன்றத் தேர்­தல்தான் நடை­பெ­ற­வேண்டும் என்­பது எமது கட்­சியின் நிலைப்­பா­டாகும். காரணம் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற ஆசன சமன்­பாடு நாட்டை உரிய முறையில் பிர­தி­நி­தி­தித்­து­வப்­ப­டுத்­த­வில்லை ” என்று அமைச்சர் தெரி­வித்துள்ளார் . அவ­ரு­ட­னான குறு­கிய நேர்­காணல் வரு­மாறு
    கேள்வி: எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் யாருக்கு ஆத­ரவு வழங்­க­வுள்­ளது?
    பதில்: ஜனா­தி­பதி தேர்­தலில் எந்த வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்று இது­வரை சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தீர்­மா­னிக்­க­வில்லை. இது தொடர்பில் கட்­சியின் அனைத்து மட்­டங்­க­ளிலும் கலந்­தா­ராய்ந்­து­வ­ரு­கின்றோம். கட்­சியின் அனைத்து மட­டங்­க­ளிலும் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­த­விட்டே ஜனா­தி­பதி தேர்­தலில் யாருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்ற தீர்­மா­னத்­துக்கு வர முடியும்.
    கேள்வி:  எப்­போது முடிவை கூறு­வீர்கள்?
    பதில்:  எப்­ப­டியும் நவம்பர் மாதத்தில் கூறுவோம்
    கேள்வி: ஆளும் ஐக­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்ற வகையில் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் குறித்த நிலைப்­பாட்டை தீர்­மா­னிக்க ஏன் தயக்கம்?
    பதில்: எமது கட்­சியை பொறுத்­த­வரை முதலில் தற்­போது ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­று­வ­தற்கே எங்­க­ளுக்கு உடன்­பா­டில்லை. தற்­போ­தைய நிலை­மையில் முதலில் பாரா­ளு­மன்றத் தேர்­தல்தான் நடை­பெ­ற­வேண்டும் என்­பது எமது கட்­சியின் நிலைப்­பா­டாகும். தற்­போது ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வதில் எங்­க­ளுக்கு உடன்­பா­ட­டில்லை. இதனை நாங்கள் தெளி­வாக கூறி­யுள்ளோம்
    கேள்வி:  இட­து­சாரி கட்­சி­களும் இவ்­வாறு கூறி­யுள்­ள­னவே?
    பதில்:  அது­போன்­றுதான் நாங்­களும் கூறு­கின்றோம்.
    கேள்வி: அதற்­கான கார­ணத்தை விளக்க முடி­யுமா?
    பதில்:  காரணம் தற்­போ­தைய பாரா­ளு­மன்றம் நாட்டை உரிய முறையில் பிர­தி­நி­தி­தித்­து­வப்­ப­டுத்­த­வில்லை. தற்­போ­தைய பாரா­ளு­மன்ற ஆசன சமன்­பாடு என்­பது நாட்டின் உண்­மை­யான கள­நி­லை­வ­ரத்தை பிர­தி­ப­லிக்­க­வில்லை. அர­சியல் கள­நி­லை­வ­ரத்தை பிர­தி­ப­லிக்­க­வில்லை. எனவே பாரா­ளு­மன்றத் தேர்­த­லைத்தான் நாங்கள் விரும்­பு­கின்றோம் என்றார்.-
    கேச­ரி -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? நவம்பர் மாதம் அறிவிப்போம் : ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top