கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள துறைமுக பாதுகாப்பு கல்லூரியை
பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த பாதுகாப்பு கல்லூரியின் நிலைமைகள் குறித்து கண்காணிப்பதற்காக
ஐக்கிய தேசியக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சற்று முன்னர்
அந்தப் பகுதிக்கு சென்றபோதே குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது
தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் எரான்
விக்கிரமரத்ன தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவத்தினால் கொழும்பு கொம்பனித்தெரு துறைமுக பாதுகாப்பு கல்லூரி பகுதியில் பதற்ற நிலைமை நீடித்து வருகின்றது

0 comments:
Post a Comment