• Latest News

    November 10, 2014

    2014 ஆம் ஆண்டு விவசாய ஆராய்ச்சித்துறையினருக்கான விருது விழங்கும் விழா

    2014 ஆம் ஆண்டுக்கான விவசாய ஆராய்ச்சித்துறையினருக்கான விருது விழங்கும் விழா இன்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் போது, விவசாய ஆராய்ச்சித்துறைக்கு தமது பங்களிப்பை நல்கிய சிறந்த ஆய்வாளர்களுக்கு ஜனாதிபதியின் கரங்களால் விருதுகள் வழங்கப்பட்டன.விவசாயத்துறை மேம்பாட்டுக்காக பெரும் பங்காற்றிய ஜனாதிபதிக்கும் இங்கு கௌரவச்சின்னம் வழங்கப்பட்டது.

    விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதி அமைச்சர் வை.பீ.பத்மசிறி ,அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல ,இலங்கை விவசாய ஆராய்ச்சி சபையின் தலைவர் கலாநிதி ஜயந்த சமரசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 2014 ஆம் ஆண்டு விவசாய ஆராய்ச்சித்துறையினருக்கான விருது விழங்கும் விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top