• Latest News

    November 21, 2014

    ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்

    பேருவளை மக்கொன்னை பிரதேசத்தில் பொது வேட்பாளர்
    அறிவிப்பை தொடர்ந்து பட்டாசு கொழுத்திய ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்
    மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் படுகாயமடைந்து நாகொடை வைத்தியசாலையில்
    கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
    பேருவளை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் ரன்ஜித்
    திலங்கசிறி தெரிவித்தார்.
    துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளவர் ஐக்கிய தேசிய கட்சி பிரபல ஆதரவாளரும் முன்னாள் பேருவளை பிரதேச
    சபை தலைவருமாகிய சமில என்பவராவார் தலையில் பலத்த
    காயங்களுடன் வைத்தியசாலையில் அவர்
    அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பிரதேச சபை எதிர்கட்சி தலைவர் ரன்சித் திலங்கசிறி தெரிவித்தார்.
    சுமார் 7 மணியளவில் மோட்டார் சைக்கள் ஒன்றில் வந்த இருவர்
    துப்பாக்கி சூட்டு நடத்திவிட்டு தப்பி சென்றுவிட்டதாக அவர்
    மேலும் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top