• Latest News

    November 16, 2014

    மகிந்தவுக்குச் சாதகமான சரத் என் சில்வாவின் கலகம்

    சத்ரியன்-
    வரும் ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகளை மேற்­கொண்டு வந்த அர­சாங்­கத்­துக்கு, எதிர்­பார்க்­கப்­பட்­டது போலவே, உயர்­நீ­தி­மன்­றத்தின் கருத்து சாத­க­மாக அமைந்­தி­ருக்­கி­றது.

    அர­சி­ய­ல­மைப்பின் 18வது திருத்­தத்­துக்கு அமைய, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச மூன்­றா­வது தட­வையும் ஜனா­தி­பதி பத­விக்குப் போட்­டி­யி­டு­வ­தற்கு எந்தத் தடை­யு­மில்லை என்று உயர்­நீ­தி­மன்றம் அறி­வித்­தி­ருக்­கி­றது.

    அது­போ­லவே, 18வது திருத்­தச்­சட்­டத்­துக்கு அமைய, நான்கு ஆண்­டுகள் நிறை­வ­டைந்த பின்னர், அடுத்த தேர்­த­லுக்­கான அறி­விப்பை வெளி­யி­டு­வ­தற்கும் தடை­யில்லை என்றும் உயர்­நீ­தி­மன்றம் கருத்துக் கூறி­யி­ருக்­கி­றது.

    இது உயர்­நீ­தி­மன்­றத்தின் தீர்ப்பு அல்ல, கருத்­தே­யாகும்.

    ஆனால், இந்தக் கருத்து, மூன்­றா­வது தடவை போட்­டி­யிட முனையும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதி­ராக, எவ­ரேனும் வழக்குத் தொடுக்க முடி­யாத வகை­யி­லான ஒரு தீர்ப்புப் போலவும் அமைந்­தி­ருக்­கி­றது.

    உயர்­நீ­தி­மன்­றத்தின் கருத்து வேறு வித­மாக அமைந்­தி­ருந்தால் மாத்­தி­ரமே, இந்த விவ­காரம் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்கும்.

    நாட்டின் நீதித்­து­றையில் அர­சியல் தலை­யீ­டுகள் அதி­க­ரித்து விட்­ட­தாக பொது­வான குற்­றச்­சாட்­டுக்கள் இருந்து வரும் நிலையில், உயர்­நீ­தி­மன்ற நீதி­யர­சர்­களே இந்தக் குற்­றச்­சாட்டைச் சுமத்தி வரு­கின்ற நிலையில், அர­சாங்­கத்­துக்கு சார்­பான இந்தக் கருத்து ஆச்­ச­ரியம் தரும் ஒரு விட­ய­மல்ல.

    ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு பாத­க­மான முறையில், உயர்­நீ­தி­மன்­றத்தின் கருத்து வரப்­போ­வ­தில்லை என்­பதை, சாதா­ரண மக்கள் கூட முன்­னரே அறிந்­தி­ருந்­தனர்.

    எனினும், நீதித்­து­றையில் அர­சியல் தலை­யீ­டுகள் குறித்து விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்த முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்­வா தான், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவை உயர்­நீ­தி­மன்­றத்­திடம் வியாக்­கி­யானம் கேட்கத் தூண்­டி­ய­வ­ராவார்.

    மூன்­றா­வது தட­வையும், மஹிந்த ராஜபக்ச போட்­டி­யிட முனைந்தால், அதற்­கெ­தி­ராக உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்குத் தொடுப்பேன் என்று அவர் பல மாதங்­க­ளுக்கு முன்­னரே எச்­ச­ரித்­தி­ருந்தார். அவர் எதற்­காக எச்­ச­ரித்தார் என்­பது மர்­ம­மா­கவே உள்­ளது.

    நீதித்­துறை சுதந்­திரம் பற்றிக் கேள்வி எழுப்­பிய அவ­ருக்கு, எந்த நம்­பிக்கையில் அத்­த­கை­ய­தொரு வழக்கைத் தொடுக்கும் துணிவு வந்­தி­ருக்க முடி­யு­மென்று தெரி­ய­வில்லை.

    அவ்­வா­றாயின், இரண்டு கார­ணங்கள் மாத்­தி­ரமே அவ­ருக்கு அத்­த­கைய தைரி­யத்தைக் கொடுத்­தி­ருக்க முடியும்.

    முத­லா­வது, அவர் கூறி­யது போன்­றல்­லாமல், நீதித்­துறை முற்­றிலும் சுதந்­திர­மா­ன­தாக இருக்க வேண்டும்.

    இரண்­டா­வது, அவர் மஹிந்த ராஜபக்சவைப் பாது­காக்க முனை­ப­வ­ராக இருக்க வேண்டும்.

    கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­ போது, சரத் பொன்­சே­கா­வுக்கு ஆத­ர­வா­கவும், மஹிந்த ராஜபக்சவுக்கு எதி­ரா­கவும் மேடை­யே­றி­ய­வர்தான் சரத் என் சில்வா.

    பின்னர் ஒரு கட்­டத்தில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச, சரத் என். சில்­வாவின் தோள் மீது கைபோட்­ட­படி பேசு­கின்ற படங்கள் ஊட­கங்­களில் வெளி­யா­கின.

    அண்­மையில் அவர்தான் மஹிந்த ராஜபக்சவுக்கு மூன்­றா­வது பத­விக்­கா­லத்­துக்கு போட்­டி­யிடும் உரிமை இல்லை என்று சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருந்தார்.

    17வது திருத்­தத்­துக்­க­மைய, சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்ட ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவினால், 18வது திருத்­தச்­சட்­டத்தின் கீழ் கிடைக்கப் பெற்­றுள்ள சலு­கையை அனு­ப­விக்க முடி­யாது என்று அவர் வாதம் செய்தார்.

    ஆனால், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச 18வது திருத்­தச்­சட்டம் நடை­மு­றைக்கு வந்த பின்­னரே, இரண்­டா­வது தடவை சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்­டி­ருந்தார்.

    அதுவே இந்த விவ­கா­ரத்தில் ஒரு பல­வீ­ன­மான விடயம்.

    ஆனால், 18 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தில், இரண்­டா­வது முறை பத­வியில் இருக்கும் ஜனா­தி­பதி, தனது பத­விக்­கா­லத்தின் நான்­காண்­டுகள் நிறை­வ­டைந்த பின்னர், அடுத்த தேர்­த­லுக்கு அழைப்பு விடுக்க முடி­யுமா? என்­பது பற்றி ஏதும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

    இதற்கு உயர்­நீ­தி­மன்­றிடம் விளக்கம் கோரி­யி­ருக்க வேண்­டி­யது அவ­சி­யமே.

    எவ்­வா­றா­யினும், சரத் என். சில்வா வழக்குத் தொடுப்பேன் என்று மிரட்­டி­யதால் தான், உயர்­நீ­தி­மன்­றத்­திடம் இருந்து தெளி­வான ஆலோசனை ஒன்றைப் பெற்­றுள்ளார் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச.

    இதன் மூலம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு சரத் என். சில்வா உதவி அளித்­துள்­ளாரே தவிர, எந்தப் பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­த­வில்லை.

    உயர்­நீ­தி­மன்­றத்தின் விளக்­கத்தைப் பெறாமல், ஒரு­வேளை அவர் தேர்­த­லுக்­கான அறி­விப்பை வெளி­யிட்­டி­ருந்தால், சில வேளை­களில் ஏதேனும் கார­ணத்தைக் காட்டி மஹிந்த ராஜபக்சவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணை­யாளர் ஏற்றுக் கொள்ள மறுத்­தி­ருக்­கலாம்.

    அல்­லது உயர்­நீ­தி­மன்­றத்­திடம் தடை கோரி எவ­ராலும் மனுத்தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கலாம்.

    அவ்­வா­றான சிக்­கல்கள் ஏற்­பட்டால், ஜனா­தி­பதி தேர்­தலை பின்­தள்ளிப் போடும் நிலை அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டி­ருக்கும்.

    இப்­போது, உயர்­நீ­தி­மன்­றத்தின் கருத்தை அறிந்து கொண்டு, தேர்தல் நகர்­வு­களில் அர­சாங்கம் இறங்­கி­யி­ருப்­பதால், இனி ஜே.வி.பி.யோ, சரத் என் சில்­வாவோ நீதி­மன்­றத்தைக் காட்டி மிரட்ட முடி­யாது.

    இவ்­வா­றான நிலையில், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவின் அடுத்த பத­விக்­கா­லத்­துக்­கான போட்டி குறித்து சர்ச்­சையைக் கிளப்­பி­ய­வர்கள் அவ­ருக்குச் சாத­க­மான விளை­வையே பெற்றுக் கொடுத்­துள்­ளனர்.

    இது தற்­செ­ய­லா­னதா-? திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­டதா? என்று தெரி­ய­வில்லை.

    சரத் என். சில்வா பிர­தம நீதி­ய­ர­ச­ராக இருந்த கால­கட்­டத்தில், பிர­த­ம­ராக இருந்த மஹிந்த ராஜபக்ச ஹெல்பிங் அம்­பாந்­தோட்டை வழக்கில் சிக்­கி­யி­ருந்தார்.

    அந்த வழக்கில் மஹிந்த ராஜபக்சவுக்கு சார்­பாக தீர்ப்­ப­ளித்­தி­ருந்­தவர் சரத் என் சில்வா.

    அந்த தீர்ப்பை, தான் மாற்றி எழு­தி­யி­ருந்தால் மஹிந்த ராஜபக்சவின் தலை­வி­தியே மாறி­யி­ருக்கும் என்று அண்­மை­யிலும் கூட சரத் என். சில்வா கூறி­யி­ருந்தார்.

    அந்த வழக்கில் இருந்து விடு­விக்­கப்­பட்­டதால் தான், ஜனா­தி­பதி தேர்­தலில் அவரால் 2005ம் ஆண்டு போட்­டி­யிட முடிந்­தது.

    அப்­போது அவர் இன்­னொரு விட­யத்­தையும் கூறி­யி­ருந்தார்.

    ஹெல்பிங் அம்­பாந்­தோட்டை வழக்கில், நிதி முறை­கேடு இடம்­பெற்­றி­ருந்­தது உண்மை. ஆனால், அந்த வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்ட முறைதான் தவ­றா­னது.

    அதனால் தான் அவர் தப்­பினார். அந்த வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்ட நேரம் தவ­றா­னது என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

    அந்த வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்ட நேரம் தவ­றா­னது என்று கூறிய சரத் என். சில்வா, இம்­முறை மூன்­றா­வது பத­விக்­கா­லத்­துக்கு மஹிந்த ராஜபக்ச போட்­டி­யிட்டால், வழக்குத் தொடுப்பேன் என்று முந்திக் கொண்­டது சரி­யான தரு­ணமா? என்ற கேள்வி எழு­கி­றது.

    ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் தேர்­தலில் போட்­டி­யிடும் உரி­மை­யில்லை என்று வேறு எவ­ரேனும், வழக்குத் தொடுத்து விடக் கூடாது என்ற கரி­ச­னையில் தான் சரத் என். சில்வா முற்­கூட்­டியே எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருக்­கலாம்.

    நிறை­வேற்று அதி­கா­ரத்­துக்கு எதி­ரா­கவும், மஹிந்த ராஜபக்சவுக்கு எதி­ரா­கவும், சரத் என்.சில்வா மீண்டும் மேடை­யேறத் தொடங்­கி­யி­ருந்­தாலும், அவர் கிளப்­பிய சர்ச்­சைதான் பல தடைகளில் இருந்து ஜனாதிபதி மஹிந்தவைக் காப்பாற்றியிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    எவ்வாறாயினும், சரத் என்.சில்வாவின் புண்ணியத்தினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

    இனி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான பிரசாரங்களைத் தொடங்க வேண்டியதுதான் மிச்சம்.

    நாரதரின் கலகம் நன்மையில் முடியும் என்பது போல, சரத் என் சில்வாவின் கலகம், மஹிந்த ராஜபக்சவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

    இருந்தாலும், இது அவருக்கு மூன்றாவது முறையும் வெற்றியைப் பெற்றுத் தருமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
    (வீரகேசரி )

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மகிந்தவுக்குச் சாதகமான சரத் என் சில்வாவின் கலகம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top