• Latest News

    November 17, 2014

    சிங்கள பௌத்த இராச்சியத்தை கட்டியெழுப்ப எம்மோடு கைகோர்க்க வேண்டும்: ஞான­சாரர்

    அடுத்த ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் அனைத்து சக்­தியும் எம்­மி­டமே உள்­ள­தென தெரி­வித்­துள்ள பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர தேரர் சிங்­கள பௌத்த கொள்­கை­யினை வலுப்­ப­டுத்தி பாது­காக்க தயா­ரா­க­வி­ருக்கும் ஒரு­வ­ரா­லேயே அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வர­மு­டி­யும்­எ­னவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

    பொது­ப­ல­சேனா இளை­ஞர்­அ­மைப்பின் மாநாடு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாபகார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இம்­மா­நாட்டில் நாட­ளா­விய ரீதியில் இருந்து 500 ற்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்­கள்­ உள்­ளிட்ட பௌத்த குரு­மார்­களும் கலந்து கொண்­டனர். இங்கு உரை­யாற்றும் போதே கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்துள்ளார்

    அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

    நாட்டின் சிங்­கள பௌத்த கொள்­கை­யினை வலுப்­ப­டுத்தி அதனை பாது­காக்க தயா­ரா­க­வி­ருக்கும் ஒரு­வரே அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வர­மு­டி­யும்­அ­தனை தீர்­மா­னிக்கும் அனைத்துச் சக்­தியும் எம்­மிடம் காணப்­ப­டு­கின்­றது. அர­சியல் அமைப்­பினை மாற்ற வேண்டும் என ஒரு சில எதிர்க்­கட்­சி­களும் சில ஆளும்­கட்சி தரப்­பி­னரும், பௌத்த குரு­மார்­களும் அணி­தி­ரண்டு சில செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவர்­களின் நோக்­க­மா­னது நாட்டில் அர­சியல் அமைப்­பினை மாற்­று­வது அன்றி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வதும் அத­னூ­டாக தமது ஆட்­சியை நிலை நாட்டும் ஒரு சுய­நல போக்­கு­ட­னேயே இதனை மேற்­கொள்­கின்­றனர்

    நாட்டில் பௌத்த இராச்­சி­யமே அவ­சியம்

    எமது நாட்டின் பௌத்த மக்­களின் கௌர­வத்தை தக்­க­வைத்து கொள்­ள­வும் ­பௌத்த இராச்­சி­யத்தை நிலை­நாட்­டவும் நாட்டில் காணப்­ப­டு­கின்ற இனப்­பி­ரச்­சினைஇ மதப்­பி­ரச்­சினை ஏனைய பிரச்சி­னை­க­ளுக்கு பெளத்த இராச்­சி­யத்தை உரு­வாக்கு வதன் மூலமே தீர்வு காண­மு­டியும். இதனை அனை­வரும் விளங்­கிக்­கொள்ள வேண்­டி­யது அவ­சியம். தேர்தல் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்­க­ளை­யும் பிர­சா­ரங்­க­ளை­யும் செய்து வரும் இவ்­வா­றான தரப்­பினர் பெளத்த கொள்­கை­யினை கட்­டி­யெ­ழுப்­பு­வதும் அதனை பாது­காத்­தி­டு­வது தொடர்­பிலும் பேசு­வ­தில்லை. இது மக்­களை ஏமாற்றும் ஒரு வேலைத்­திட்­டம். இதற்கு இடம் கொடுப்­ப­தினால் மக்­க­ளுக்கோ அல்­லது நாட்­டிற்கோ எவ்­வித நன்­மை­களும் கிடைக்கப் போவ­தில்லை.

    நிபந்­த­னைகள்

    ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் நாம் முன்­வைத்த நிபந்­த­னை­கள் ­மற்றும் கோரிக்­கைகள் தொடர்பில் எம்­மீது பாரிய குற்­றச்­சாட்­டு­களும் பிர­சா­ரங்­க­ளும் ­பல்­வேறு தரப்­பி­னரால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன ஜனா­தி­பதி தேர்தலா­னது எம்மை பொறுத்த வரை ஒரு பெரிய விட­ய­மல்ல. எமக்கு பௌத்த தர்ம கொள்­கையே அவ­சியம் என்­பதால் அதனை பாது­காக்­கவும் எமது கோரிக்­கை­களை ஏற்­றுக்கொள்ள தயா­ராக இருக்கும் தரப்­பி­ன­ரு­ட­னேயே எமது செயற்­பா­டுகள் அமை­யும்.

    முஸ்லிம் தீவிரவாதம்


    நாட்டில் முஸ்லிம் தீவிரவாதிகளின் செயற்பாடுகள்தலைதூக்கி காணப்படும் இத்தருணத்தில் 18 ஆம் திருத்தத்தை நீக்க வேண்டும் 19 ஆம் திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என பிரசாரங்களை கூறி வருவதை தவிர்த்து சிங்கள பௌத்த இராச்சியத்தை கட்டியெழுப்பவும் மக்களை பாதுகாக்கவும் எம்மோடு கைகோர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிங்கள பௌத்த இராச்சியத்தை கட்டியெழுப்ப எம்மோடு கைகோர்க்க வேண்டும்: ஞான­சாரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top