• Latest News

    November 15, 2014

    பொதுவேட்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில்

    எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்க்­கட்­சி­களின் சார்பில் பொது­ வேட்­பா­ள­ராக போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ளரை தெரிவு செய்­வ­தற்­கான அர­சியல் காய்­ந­கர்த்­தல்கள் இறு­திக்­கட்­டத்தை அடைந்­துள்­ளன. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க

    குமா­ர­துங்க உள்­ளிட்ட பல முக்­கி­யஸ்­தர்­களின் பெயர்கள் பொது வேட்­பாளர் பட்­டி­யலில் தொடர்ந்து பரி­சீ­ல­னையில் உள்­ளன.

    அந்­த­வ­கையில் கரு­ஜ­ய­சூ­ரி­யவே பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் சாத்­தியம் அதிகம் உள்­ள­தா­கவும் எனினும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யிட வைப்­ப­தற்­கான தீவிர முயற்­சி­களும் இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

    பொது வேட்­பாளர் தெரிவு இறுதிக் கட்­டத்தை அடைந்­துள்ள நிலையில் பொது வேட்­பா­ளரை கள­மி­றக்­கு­வ­தற்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை கொழும்பில் எதிர்க்­கட்­சி­க­ளினால் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

    2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதற்­ப­கு­தியில் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­று­வது உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் எதிர்க்­கட்­சி­களின் சார்பில் பொது எதி­ரணி வேட்­பா­ளரை நிறுத்­து­வ­தற்கு பொது எதி­ர­ணியின் சார்பில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்தே இதற்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது.

    அந்­த­வ­கையில் பொது எதி­ர­ணியின் சார்­பான வேட்­பாளர் வெற்­றி­பெறும் பட்­சத்தில் நாட்டில் தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கும் அதில் ஆளும் கட்­சி­யி­லி­ருந்து 15 பேரும் எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து ஐந்து பேரும் அமைச்­சர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டவும் இணக்கம் காணப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

    எதி­ர­ணியின் சார்பில் பொது­வேட்­பா­ள­ராக போட்­டி­யி­ட­வுள்ள வேட்­பா­ளரை தெரிவு செய்­வ­தற்­கான காய்­ந­கர்த்­தல்கள் மற்றும் தீவிர முயற்­சிகள் கடந்த சில வாரங்­க­ளாக நடை­பெற்று வந்­தன. எனினும் எதி­ர­ணியின் சார்­பி­லுள்ள கட்­சி­க­ளினால் இறுதி முடி­வுக்கு வர­மு­டி­யாத நிலை காணப்­பட்­டது. பொது வேட்­பாளர் பட்­டி­யலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கரு ஜய­சூ­ரிய , மாது­ளு­வாவே சோபித்த தேரர், அர்­ஜுண ரண­துங்க ஆகி­யோரின் பெயர்கள் பரி­சீ­ல­னையில் இருந்­தன.

    ஒரு கட்­டத்தில் கரு ஜய­சூ­ரிய பொது­வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வார்கள் என பர­வ­லாகக் கூறப்­பட்­டது. இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­கவை பொது வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வ­தற்­கான முயற்­சி­களே ஆரம்­பத்­தி­லி­ருந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

    தற்­போது பொது எதி­ர­ணியில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி உள்­ளிட்ட எதிர்க்­கட்­சிகள் அங்கம் வகிக்­கின்­றன. மக்கள் விடு­தலை முன்­னணி இது­வரை பொது எதி­ர­ணியில் இணை­யா­வி­டினும் சில தினங்­களில் கட்­சியின் முடிவு அறி­விக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மேலும் ஆளும் கட்­சியில் அங்கம் வகிக்­கின்ற ஜாதிக ஹெல­உ­று­ம­யவும் எதிர்­வரும் 19 ஆம் திகதி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெ ளியேறி பொது எதி­ர­ணி­யுடன் இணைந்து கொள்ளும் என தெரி­கி­றது. மேலும் சிவில் அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் என்பனவும் எதிரணியுடன் கைகோர்த்துள்ளன.

    ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம தலைமையிலான பல முக்கியஸ்தர்கள் சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் தொடர் பேச்சுக்களை நடத்திவந்தனர். எனினும் இந்தப் பேச்சுக்களின் போதும் எதுவித உறுதிப்பாட்டையும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொதுவேட்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top