• Latest News

    November 07, 2014

    கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உலக உளநல தினம்

    எம்.ஐ.சம்சுதீன்: உலக உளநல தினத்தை முன்னிட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இவ் வைத்தியசாலையின் உளநலத்துறை வைதியர் கலாநிதி யூ.எல்.சராப்தீன் தலைமையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

    இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்வில் வைத்திய நிபுணர்கள் ஏனைய வைத்தியர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    நிகழ்வின் போது உளநலத்துறை வைதியர் கலாநிதி யூ.எல்.சராப்தீனால் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டதுடன் ஊழியர்களால் உளவளத்துறை சார்ந்த நாடகம் ஒன்றும் அரங்கேற்றப்பட்டது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் உலக உளநல தினம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top