நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலைமையில் பொதுபல சேனா அமைப்பின் தேசிய அரசியல் கொள்கையை வலுப்படுத்த அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரியவருகிறது.
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறுப்பினர்கள் இந்த அழுத்தத்தை கொடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக பொதுபல சேனா அமப்பின் அரசியல் சபை அவசரமாக கூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதி ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டால், ஞானசார தேரரையும் தேர்தலில் நிறுத்துவது என இதன் போது தீரமானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுபல சேனா அமைப்பை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பின்னணியில் இருந்து இயக்கி வருவதாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறுப்பினர்கள் இந்த அழுத்தத்தை கொடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக பொதுபல சேனா அமப்பின் அரசியல் சபை அவசரமாக கூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதி ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டால், ஞானசார தேரரையும் தேர்தலில் நிறுத்துவது என இதன் போது தீரமானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுபல சேனா அமைப்பை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பின்னணியில் இருந்து இயக்கி வருவதாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment