இலங்கை கிரிக்கட் நிறுவனம் கொள்ளையர்களின் குகையாக மாற்றமடைந்துள்ளது என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான அஜர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு இலங்கை கிரிக்கட் அணி விஜயம் மேற்கொண்டமை ஓர் பிழையான தீர்மானமாகும்.
இலங்கை அணி ஒருநாள் போட்டித் தொடரில் படு தோல்வி அடைந்தமைக்கான பொறுப்பினை விளையாட்டுத்துறை அமைச்சரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
திட்டமிடாமல் போட்டித் தொடர்களில் பங்கேற்றக்கூடாது. இவ்வாறான தீர்மானங்களின் மூலமாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஒர் வைக்கோல் பொம்மையாக செயற்படுகின்றார் என்பது வெளிச்சமாகின்றது.
இந்த போட்டித் தொடரின் மூலம் இலங்கைக்கு பணம் கிடைத்ததா? இலங்கை கிரிக்கட் நிறுவனம் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அடிமையாகியுள்ளது என அர்ஜூன ரணதுங்க சாடியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு இலங்கை கிரிக்கட் அணி விஜயம் மேற்கொண்டமை ஓர் பிழையான தீர்மானமாகும்.
இலங்கை அணி ஒருநாள் போட்டித் தொடரில் படு தோல்வி அடைந்தமைக்கான பொறுப்பினை விளையாட்டுத்துறை அமைச்சரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
திட்டமிடாமல் போட்டித் தொடர்களில் பங்கேற்றக்கூடாது. இவ்வாறான தீர்மானங்களின் மூலமாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஒர் வைக்கோல் பொம்மையாக செயற்படுகின்றார் என்பது வெளிச்சமாகின்றது.
இந்த போட்டித் தொடரின் மூலம் இலங்கைக்கு பணம் கிடைத்ததா? இலங்கை கிரிக்கட் நிறுவனம் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அடிமையாகியுள்ளது என அர்ஜூன ரணதுங்க சாடியுள்ளார்.

0 comments:
Post a Comment