• Latest News

    December 25, 2014

    யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து 27ம் திகதி அறிவிக்கப்படும்: மு.காங்கிரஸ்

    யாருக்கு ஆதரளிப்பது என்பது குறித்து 27ம் திகதி அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதவரளிப்பது என்பது பற்றி அறிவிக்கப்படும் என கட்சியின் உறுப்பினர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.

    கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன.

    இந்த கருத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து தலைவர் ஹக்கீம் இறுதித் தீர்மானம் எடுப்பார்.

    பொதுபல சேனா போன்ற கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளமை கட்சியின் நிலைப்பாட்டை மாற்றியமைக்கக் கூடிய வகையில் அமையாது என ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.

    சிங்கள இணையத்தளமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து 27ம் திகதி அறிவிக்கப்படும்: மு.காங்கிரஸ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top