• Latest News

    December 02, 2014

    வெளி­நா­டு­களின் கைப்பொம்­மை­க­ளாக எம்மை ஆட்­டுவிப்­ப­தற்கும் ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டேன் :மஹிந்த ராஜபக்ஷ

    மஹிந்த ராஜபக்ஷ
    நாட்டில் அர­சியல் ஸ்திர­மில்லாத நிலை­மையை ஏற்­ப­டுத்தி மீண்டும் பயங்­க­ர­வா­தத்தை உயிர்ப்­பிப்­ப­தற்கும் வெளி­நா­டு­களின் கைப்பொம்­மை­க­ளாக எம்மை ஆட்­டுவிப்­ப­தற்கும் ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டேன் என உறு­தி­ய­ளித்­துள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மத்­திய கிழக்கு நாடு­களில் தலை­தூக்­கி­யுள்ள நெருக்­க­டி­களை பார்த்து நாம் பாடம் படிக்கவேண்­டு­மென்றும் தெரி­வித்­துள்ளார்.

    அலரி மாளி­கையில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற இணக்­கப்­பாட்டு சபை உத்­தி­யோ­கத்­தர்­க­ளு­ட­னான சந்­திப்பில் உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

    ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்து உரை­யாற்றும் போது, இன்று மத்­திய கிழக்கு நாடு­களில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­மை­களை நாம் பார்க்­கின்றோம். தெரிந்து கொள்­கின்றோம். இவ்­வா­றா­ன­தொரு நிலைமை ஏற்­படும் போது ஒரு நாட்டில் முன்­னேற்­றத்தைக் காண முடி­யாது. அங்கு வீழ்ச்­சி­யையே காண முடியும்.

    நாட்டின் முன்­னேற்­றத்­திற்கு அங்கு அர­சியல் ஸ்திரத் தன்மை இருக்க வேண்டும். நாம் எந்­த­வொரு இனத்­திற்கும் எதி­ராக செயற்­ப­ட­வில்லை. நாட்­டி­லி­ருந்து பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்­கவே நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம். மீண்டும் அவ்­வா­றா­ன­தொரு நிலை­மையை ஏற்­ப­டுத்த இட­ம­ளிக்­க­மாட்டோம்.
    நாட்டில் அர­சியல் ஸ்திர­மில்லா நிலை­மையை ஏற்­ப­டுத்த இட­ம­ளிக்க மாட்டோம். நாட்டில் ஸ்திர­மில்லா நிலைமை ஏற்­பட்டால் அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுக்க முடி­யாது என்­பதை மனதில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

    தற்­போ­துள்ள ஸ்திரத்­தன்­மையை பாது­காக்க அதனை முன்­னெ­டுத்து செல்­வது எமது அனை­வ­ரி­னதும் கடப்­பா­டாகும். அப்­போ­துதான் சமூ­கத்தில் உங்­க­ளுக்கு உங்கள் பிள்­ளை­க­ளுக்கு அந்தப் பிள்­ளை­களின் பிள்­ளை­க­ளுக்கு நாட்­டுக்குள் அமை­தி­யாக வாழ முடியும்.

    அவ்­வா­றில்­லாமல் நாட்டை பின்­நோக்கி நகர்த்­து­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அத்­தோடு வெளி­நா­டு­க­ளுக்கு தேவை­யான விதத்தில் எம்மை கைப்­பொம்­மை­க­ளாக ஆட்­டு­விக்க முடி­யாது. நாட்டை அடி­மைப்­ப­டுத்­தவும் எவ­ருக்கும் இட­ம­ளிக்க மாட்டோம்.

    நீங்கள் இந்த நாட்­டுக்கு செய்யும் சேவையை வேறு எவ­ராலும் செய்ய முடி­யாது. இணக்க சபைக்கு படித்­த­வர்கள் புத்­திக்­கூர்­மை­யுள்­ள­வர்கள் சிறந்த குடும்பப் பின்­புலம் உள்­ள­வர்­களே நிய­மிக்­கப்­ப­டு­கின்­றனர். நாடு பூரா­கவும் 328 இணக்­கப்­பாட்டுச் சபைகள் இயங்கி வரு­கின்­றன. பிரச்­சி­னை­யில்­லாத சமூ­க­மொன்றில் வாழ்­வ­தையே நாம­னை­வரும் விரும்­பு­கிறோம்.

    இணக்­கப்­பா­டு­களை ஏற்­ப­டுத்­து­ப­வர்கள் என்ற ரீதியில் நீங்கள் இன மத குல பேதங்­களை பார்ப்­ப­தில்லை. கௌர­வ­மாக உங்கள் தொழிலை முன்­னெ­டுக்­கின்­றீர்கள். முன்­னைய காலங்­களில் எம்­பி­லி­பிட்­டிய நீதி­மன்­றத்தில் அதி­க­மாக கொலை வழக்­கு­களே விசா­ரிக்­கப்­பட்­டன.

    ஆனால் இன்று அதி­க­ளவில் விவா­க­ரத்து வழக்­கு­களே விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. ஏனென்றால் இன்று நடை­மு­றையில் உள்ள சட்டம் கணவன் மனை­விக்­கி­டையே பிரச்­சினை ஏற்­பட்டு நீதி­மன்றம் சென்றால் அவர்கள் இரு­வ­ரையும் தனித் தனி­யாக பிரித்து விடு­கின்­றார்கள்.

    அன்று வீட்டில் பிரச்­சி­னையை பானையில் சோறு வேகும் வரைதான் என்று சொல்­வார்கள். அதன் பின்னர் சமா­தா­ன­மாகி விடு­வார்கள். ஆனால் இன்­றைய நிலை அப்­படி இல்லை. எனவே இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைக்­காண இணக்க சபை ஊடாக முயற்­சிக்க வேண்டும்.

    அதை­வி­டுத்து கணவன் மனை­வியை பிரித்து பிள்­ளை­களை நடுத்­தெ­ருவில் கைவிடும் சட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு பதி­லாக புதிய சட்­டங்­களை இயற்ற வேண்டும். எமது நாட்டு கலா­சா­ரத்­திற்குள் மேற்­கத்­தைய நாடு­களின் கலா­சா­ரத்தை உள்­ளீர்க்க இட­ம­ளிக்க முடி­யாது.

    எமது நாட்டின் கலா­சாரம் மற்றும் குடும்ப விழு­மி­யங்­க­ளுக்­க­மைய சட்­டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். தற்போதுள்ள சட்டங்களால் குடும்பங்களை சீரழிப்பதா? பிள்ளைகளை அனாதைகளாக்குவதா? என்பதை தேடிப் பார்க்க வேண்டும்.

    பல வருடங்களுக்கு முன்பதாக சேவை செய்த போதிருந்த நாடா இன்றுள்ளது? மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. அடிப்படை வசதிகள் உயர்ந்துள்ளது. கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெளி­நா­டு­களின் கைப்பொம்­மை­க­ளாக எம்மை ஆட்­டுவிப்­ப­தற்கும் ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்டேன் :மஹிந்த ராஜபக்ஷ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top