• Latest News

    December 02, 2014

    இந்து சமூத்திரத்தில் வெளி­நாட்­ட­வரின் அநா­வ­சிய இரா­ணுவ பிர­சன்­னங்கள் தவிர்க்­கப்­பட வேண்­டும்: இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர்

    அஜித் டோவல்
    இந்து சமுத்­தி­ரத்தில் மனித கடத்­தல்கள், போதைப் பொருள் கடத்­தல்கள், கடற்­கொள்ளை என்­ப­வற்றை தடுப்­ப­தற்கு நாடு­க­ளுக்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்பு மிக முக்­கி­ய­மாகும் என்று இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் அஜித் டோவல் தெரி­வித்துள்ளார்

    இந்து சமுத்­தி­ரத்தை அண்­டிய பிராந்­தி­யங்கள் பல்­லின சமூ­கங்­களைக் கொண்ட நாடு­க­ளாக அமைந்­துள்­ளன. எனவே இங்கு அமை­தி­யான தன்மை நிலை­பெற வேண்டும். வெளி­நாட்­ட­வரின் அநா­வ­சிய இரா­ணுவ பிர­சன்­னங்கள் தவிர்க்­கப்­பட வேண்­டிய விட­யங்களாகும் என்றும் அவர் குறிப்­பிட்டுள்ளார் .

    இலங்கை பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டித்­தமை பாராட்­டுக்­கு­ரிய விட­ய­மாகும். அத­னூ­டாக பிராந்­தி­யத்தின் பாது­காப்பு பல­ம­டைந்­துள்­ளது. அதே­வேளை இந்­தி­யாவும் பிராந்­தி­யத்தின் பாது­காப்பை உறு­தி­செய்ய பாரிய பங்­க­ளிப்பைச் செய்­துள்­ளது என்றும் அவர் கூறியுள்ளார்

    காலியில் நேற்று ஆரம்­ப­மான காலி கலந்­து­ரை­யாடல் எனப்­படும் கடல் பாது­காப்பு மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டுள்ளார்.

    அவர் அங்கு மேலும்  இந்து சமுத்­தி­ரத்தை அண்­டிய பிராந்­தி­யங்கள் பல்­லின சமூ­கங்­களை கொண்ட நாடு­க­ளாக அமைந்­துள்­ளன. எனவே இங்கு அமை­தி­யான தன்மை நிலை­பெற வேண்டும். வெளி­நாட்­ட­வரின் அநா­வ­சிய இரா­ணுவ பிர­சன்­னங்கள் தவிர்க்­கப்­பட வேண்­டிய விட­யங்கள் ஆகும். 1971 ஆம் ஆண்டின் ஐக்­கிய நாடு­களின் யோச­னைப்­படிஇ இந்து சமுத்­திர பிர­தேசம் ஒரு சமா­தான பிர­தே­ச­மாகும். எனவே இந்தப் பிராந்­தி­யத்தில் அந்­நிய இரா­ணுவ பிர­சன்­னங் க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது.

    அயல் நாடு­க­ளுடன் இந்­தி­யா­வுக்கு சிறி­ய­ள­வி­லான விவ­கா­ரங்கள் இருக்­கலாம். ஆனால் மிகவும் நெருக்­க­மான உறவை இந்­தியா அயல் நாடு­க­ளுடன் கொண்­டுள்­ளது. இந்­தியா 5000 வரு­டங்­க­ளாக பிராந்­தி­யத்தில் பல­மான நாடாக இருந்­துள்­ளது. எனினும் அயல் நாடு­களை ஆக்­கி­ர­மிக்கும் காரணம் இந்­தி­யா­வுக்கு இருந்­த­தில்லை.

    எவ்­வா­றெ­னினும் கடற்­கொள்ளை, மனித கடத்­தல்கள், போதைப் பொருள் கடத்­தல்கள் போன்ற சவால்­களை எதிர்­கொள்ள நாடு­க­ளுக்கு இடையில் ஒத்­து­ழைப்பு அவ­சி­ய­மாகும். சிறந்த கடல் பாது­காப்பு எதிர்­கா­லத்­துக்­காக இலங்கை மற்றும் மாலை­தீ­வு­க­ளுடன் இந்­தியா நெருங்­கிய உறவை மேலும் வலு­வாக்கும்.

    இந்து சமுத்­தி­ரத்தில் மனித கடத்­தல்கள், போதைப்பொருள் கடத்­தல்கள், கடற்­கொள்ளை என்­ப­வற்றை தடுப்­ப­தற்கு நாடு­க­ளுக்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்பு மிக முக்­கி­ய­மாகும்.

    போது­மான கடல்சார் பாது­காப்பு இன்­மை­யினால் சில கிழக்­கா­சிய நாடுகள் இன்னும் பல்­வேறு இடை­யூ­று­களை சந்­தித்­து­வ­ரு­கின்­றன. மனித கடத்­தல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்­தல்கள் என்­பன சில கிழக்­கா­சிய நாடு­களை கடு­மை­யாக பாதித்­துள்­ளன. கடற்­கொள்­ளை­யா­னது இன்று புதிய வடி­வத்தை பெற்­றுள்­ளது.

    இதே­வேளை இலங்கை பயங்­க­ர­வா­தத்தை தோற்­க­டித்­தமை பாராட்­டுக்­கு­ரிய விட­யமாகும். அத­னூ­டாக பிராந்­தி­யத்தின் பாது­காப்பு பல­ம­டைந்­துள்­ளது. அதே­வேளை இந்­தி­யாவும் பிராந்தியத்தின் பாதுகாப் பை உறுதிசெய்ய பாரிய பங்களிப்பை செய்துள்ளது.

    நாடுகள் இணைந்து முன்னெடுக்கும் ஆய் வுகள், இருதரப்பு உறவுகள், முறையான தொடர்பாடல் என்பன பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அத்துடன் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கும் இவை உதவும் .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்து சமூத்திரத்தில் வெளி­நாட்­ட­வரின் அநா­வ­சிய இரா­ணுவ பிர­சன்­னங்கள் தவிர்க்­கப்­பட வேண்­டும்: இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top