• Latest News

    December 10, 2014

    டிசம்பர் கடைசியில் முடிவு சொல்கிறோம்: மாவை

    ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தங்களது முடிவை இம்மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

    வடகிழக்கு தமிழ் மக்களின் ஆலோசனைகளைப் பெற்று ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை பரிசீலித்த பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

    ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு வேட்பாளர்களும் வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து உரிய கவனம் செலுத்தவில்லை என மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் தீர்மானம் மிக்கவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: டிசம்பர் கடைசியில் முடிவு சொல்கிறோம்: மாவை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top