• Latest News

    December 08, 2014

    சர்வதேச நீதிமன்றுக்கு என்னை கொண்டு செல்லவே எதிரணியினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்: ஜனா­தி­பதி

    எங்­களை பழி­வாங்கும் விடு­தலைப் புலி பயங்­க­ர­வா­தி­களின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் என்னை ‘ஹேக்’ நக­ரி­லுள்ள சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கும் கொண்டு செல்­வ­தற்­காக ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது எதி­ர­ணியினர் உடன்­ப­டிக்­கை­களை செய்து கொண்­டுள்­ளனர் என தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, அன்று பஸ்­களில் குண்­டுகள் வெடித்­தன. இதனால் உயி­ருக்கு உத்­த­ர­வா­த­மில்­லாமல் இருந்த நீங்கள் இன்று உத்­த­ர­வா­தத்­துடன் தொழில் செய்­கின்­றீர்கள் என்றும் தெரி­வித்­துள்ளார்.

    தனியார் போக்­கு­வ­ரத்து பஸ் உரி­மை­யா­ளர்கள் மற்றும் ஊழி­யர்­களை கடந்த சனிக்­கி­ழமை அலரி மாளி­கையில் சந்­தித்து உரை நிகழ்த்தும் போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;யுத்தம் முடிந்து ஐந்து வரு­டங்­க­ளுக்கு பின்னர் துரி­த­மான அபி­வி­ருத்­தி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். அதி­வேக நெடுஞ்­சா­லைகள் உட்­பட மக்­களின் அடிப்­படை வச­தி­க­ளையும் மேம்­ப­டுத்தி வரு­கின்றோம்.

    ஆனால், ஒரு சில­ருக்கு இது ஜீர­ணிக்­க­வில்லை. நாட்டின் அபி­வி­ருத்­தியை பின்­ன­டையச் செய்யும் தேவை இவர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.இவர்­க­ளுக்கு நாட்டில் மீண்­டு­மொரு யுத்தம் ஏற்­பட வேண்­டு­மென்­பதே ஆவ­லாகும்.

    விடு­தலைப் புலி­களும் எம்மை பழி­வாங்­கு­வ­தற்கு கங்­கணம் கட்டி செயல்­ப­டு­கின்­றனர். இவ்­வா­றான குழுக்கள் அல்­ஜ­சீரா தொலைக்­காட்சி பேட்­டி­களில் புலிகள் அமைப்­பி­ன­ரு­டனும் புலம்­பெயர் புலி ஆத­ர­வா­ளர்­க­ளு­டனும் விவாத நிகழ்ச்­சி­களில் கலந்து கொள்­கின்­றன.

    இதில் கலந்து கொண்ட இரண்டு இலங்­கை­யர்கள் புலி­களின் கருத்­துக்­க­ளுக்கு தலை­ய­சைத்து தமது ஆத­ரவை தெரி­விக்­கின்­றனர்.

    மஹிந்த தோற்றால் அவரை ஹேக் நக­ரி­லுள்ள சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்வோம் என்ற புலி­களின் நிலைப்­பாட்டை ஆத­ரிக்­கின்­றனர்.

    இதற்­கா­கத்தான் இந்தக் கூட்­ட­ணி­யினர் இன்று உடன்­ப­டிக்­கை­களை செய்து கொள்­கின்­றனர். எனவே, இந்த பழி­வாங்கும் முயற்­சிகள் தொடர்­பாக நீங்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். உங்­க­ளது தொழிற்­துரை ஒரு காலத்தில் எது­வி­த­மான திட்­ட­மி­டலும் இன்­றியே முன்­னெ­டுக்­கப்­பட்­டது. பாது­காப்­பிற்கு உத்­த­ர­வாதம் இல்­லாமல் இருந்­தது. அன்று நீங்கள் உங்கள் பஸ்­களில் ஏறு­ப­வர்­களை சந்­தே­கத்­து­ட­னேயே பார்த்­தீர்கள்.

    எந்த பஸ்ஸில் குண்டு வெடிக்­குமோ என்ற அச்சம் உங்கள் மனங்­களில் குடி கொண்­டி­ருந்­தது. பிர­யா­ணி­க­ளி­னதும் உங்­க­ளி­னதும் உயி­ருக்கு உத்­த­ர­வாதம் இல்­லாத நிலை காணப்­பட்­டது. ஆனால், இன்று அந்த நிலை மாறி­யுள்­ளது. நாட்டில் சுதந்­தி­ர­மாக நட­மாடும் நிலைமை ஏற்­ப­டுத்­தப்­பட்டு உங்கள் உயிர்­க­ளுக்கும் உத்­த­ர­வாதம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

    விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து உங்­களை மீட்­டெ­டுத்து அபி­வி­ருத்­தியின் பாதையில் வழி நடத்திக் கொண்டிருக்கின்றோம். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.8 ஆக உள்ளது. ஆனால்இ வட பகுதியின் வளர்ச்சி நூற்றுக்கு 22 ஆக அதிகரித்துள்ளது. அதிலிருந்து நாம் வடக்கின் அபிவிருத்திக்கு முதலிடம் வழங்குவதை உங்களால் உணர முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். -VK
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்வதேச நீதிமன்றுக்கு என்னை கொண்டு செல்லவே எதிரணியினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்: ஜனா­தி­பதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top