• Latest News

    March 27, 2015

    சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு செயலமர்வு

    -அபூ-இன்ஷப்:
    அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் இன்று (26) நாடளாவிய ரீதியில் ஆரம்பித்த வைக்கப்பட்டன.
    இவ் வேலைத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச அதிகாரிகளை அறிவுறுத்தம் செயலமர்வு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.சபீர் தலைமையில் நடைபெற்றது.
    இந்த செயலமர்வில் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள், இரானுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    நுளம்புகளால் ஏற்படுத்தப்படும் உயிராபத்துக்கள், நோய்கள் தொடர்பாகவும் அதனை தடுப்பதற்கான வழிவகைள் எவ்வாறு மேற்கொள்வது அதனை பொதுமக்களை மத்தியில் எவ்வாறு விளிப்பூட்டுவது என்பது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கான செயலமர்வில் கலந்துரையாடப்பட்டன



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு செயலமர்வு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top