• Latest News

    August 05, 2015

    அட்டாளைச்சேனை மாணவர்களின் நலனுக்காக நாளை பற்சிகிச்சை

    அபு அலா –
    கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலை மாணவர்களின் பற்சிகிச்சைக்கான பற் சிகிச்சைப் பிரிவு நாளை வியாழக்கிழமை (06) அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் திறந்து வைக்கப்படவுள்ளதாக பாடசாலையின் பிரதி அதிபர் ஐ.எம்.பாஹிம் தெரிவித்தார்.

    பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.அப்துல் சலாம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், மாவட்ட பற் சிகிச்சை வைத்தியர் டாக்டர் ஏ.எல்.லத்தீப் ஆகியோருடன் அக்கரைப்பற்று வலய கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம், பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

    அட்டாளைச்சேனை, தைக்காநகர், சம்புநகர், ஆலங்குளம், மீலாத்நகர், பாலமுனை, திராய்க்கேணி போன்ற பிரதேச பாடசாலை மாணவர்களுக்காக இந்த பற்சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் பாடசாலையின் பிரதி அதிபர் ஐ.எம்.பாஹிம் மேலும் தெரிவித்தார்.

    குறிப்பிட்ட பிரதேச பாடசாலை மாணவர்களின் பல் சம்பந்தப்பட்ட பல நோய்கள் காணப்படுவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைந்து வருவதையும் கருத்திற்கொண்ட அல் முனீறா பாடசாலை அபிவிருத்தி குழுவினர் செய்த முயற்சியினாலேயே இந்த பற்சிகிச்சை நிலையம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அட்டாளைச்சேனை மாணவர்களின் நலனுக்காக நாளை பற்சிகிச்சை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top