நல்லாட்சிக்கான
தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய தலைமைத்துவ சபையின் ஏற்பாட்டில்
கற்றோரைக் கௌரவிப்போம் எனும் விஷேட கௌரவிப்பு நிகழ்வு அண்மையில்
காத்தான்குடியிலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் அரங்கில்;
இடம்பெற்றது.
இதன்போது அரச துறையின் உயர்
பரீட்சையான (எஸ்.எல்.ஏ.எஸ்.) பரீட்சையில் சித்திபெற்ற ரீ.எம்.எம்.அன்ஸார்,
ஏ.ரீ.எம்.ராபி, திருமதி சில்மியா ஜாபீர் ஆகியோரும் சுகாதாரத் துறையின் உயர்
பதவியினைப் பெற்ற வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ_ம்; அதிதிகளினால்
நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நல்லாட்சிக்கான
தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய செயலாளர்எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர்
ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்; முன்னணியின் தவிசாளர்
பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், முன்னணியின் தேசிய கொள்கை பரப்புச்
செயலாளர் சிராஜ் மஹ_ர், அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர்
எம்.எம்.பளுலுல் ஹக் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்




0 comments:
Post a Comment