• Latest News

    December 10, 2015

    நிந்தவூரில் ஷீஆ ஒழிப்பு மாநாடு நாளை

    சுலைமான் றாபி
    இன்று இலங்கையில் வேகமாக பரவிவரும் ஷீயாக்களின்  ஊடுருவல் பற்றியும், அவர்களின் நடவடிக்கைகள் பற்றியும் பொது மக்களை விழிப்பூட்டும் ஷீஆ ஒழிப்பு மாநாடு நாளை (11.12.2015) வெள்ளிக் கிழமை  நிந்தவூர்  ஜூம்ஆ பள்ளிவாசலில் இஷா தொழுகையினைத்தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

    நிந்தவூர் றிசாலா அமைப்பின் தஃவாப் பிரிவினரின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டிற்கு மௌலவி அஷ்ஷேஹ் எம்.நுஸ்ரான் (பின்னூரி) அவர்கள் கலந்து கொண்டு ஷீஆக்கள் பற்றிய முக்கிய விளக்கவுரை நிகழ்த்தவுள்ளார்.

    இதேவேளை இம்மாட்டில் கலந்து கொள்வதற்காக பெண்களுக்கென பிரத்தியேக இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பள்ளிவாசலில் இஷா தொழுகையினை நிறைவேற்றுவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக  நிந்தவூர் றிசாலா அமைப்பின் தஃவாப் பிரிவு தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் ஷீஆ ஒழிப்பு மாநாடு நாளை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top