புகையிலை பொருட்களுக்கான வரி 90 வீதமாக அதிகரிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகரட் உள்ளிட்ட புகையிலை உற்பத்தி
பொருட்கள் மீதாக வரியை அதிகரிப்பது தொடர்பான யோசனை தொடர்பாக ஆராயவென
அமைக்கப்பட்டிருந்த அமைச்சரவை உபகுழு அது தொடர்பான அறிக்கையை எதிர்வரும்
செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக அமைச்சரவையின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் புகையிலை பொருட்களுக்கான வரி 90 வீதமாக அதிகரிப்படவுள்ளது.
அதற்கமைய சிகரட் வகைகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment