• Latest News

    November 11, 2016

    வரவு-செலவு திட்டம் 2017 : நிந்தவூரில் ஆதார வைத்தியசாலை ஸ்தாபிக்க 200 மில்லியன் ரூபா

    தொகுப்பு சஹாப்தீன் -
    நிலை­யான அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடைந்து கொள்­வ­தற்­கான எமது அர்ப்­ப­ணிப்­பினை வழங்கும் வகையில் கராப்­பிட்­டிய, அம்­பாறை மற்றும் யாழ்ப்­பாணம் வைத்­தி­ய­சா­லை­களில் விசேட சிறுவர் பரா­ம­ரிப்பு தொகு­தி­களை ஸ்தாபிப்­ப­தற்கு ரூபா 1,000 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். நிந்­த­வூரில் ஆதார வைத்­தி­ய­சா­லை­யினை ஸ்தாபிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­வ­துடன் அதற்­காக ரூபா 200 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கும் கராப்­பிட்­டிய போதனா வைத்­தி­ய­சா­லையில் வாய்­வழி சுகா­தார தொகு­தி­யொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்­காக ரூபா 50 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன். 
     
    இந் நிகழ்ச்­சித்­திட்­டத்தின் கீழ் வழங்­கப்­ப­ட­வுள்ள புல­மைப்­ப­ரி­சில்­க­ளுக்­கான செல­வி­னங்­களை ஈடு செய்­வ­தற்கு ரூபா 300 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    126. சந்தை மற்றும் கைத்­தொழில் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கு இரத்­தி­னக்கல் தொடர்­பான அறிவு, ஆப­ரணக் கல் பதித்தல், ஆப­ரண வடி­வ­மைப்பு, பெறு­மதி மிக்க மாணிக்கக் கல் பட்டைத் தீட்­டுதல், பற்­றிக்­ ­வேலை மற்றும் மூங்கில் கைவினைப் பொருட்கள் தயா­ரிப்பு என்­ப­வற்றில் தேசிய தொழில்சார் தகைமை (NCQ) மட்­டத்தில் பாட­நெ­றி­களை உள்­ள­டக்கும் வகையில் தொழிற்­ப­யிற்சி மற்றும் தொழில்­நுட்ப பயிற்சி நிறு­வ­கங்கள் தமது பாட­வி­தா­னத்­தினை விரி­வாக்­கு­வ­தற்கு நான் ஊக்­க­ம­ளிக்­கின்றேன். 

    127. அதே­வேளை ஆடைக் ­கைத்­தொழில், சுகா­தார பரா­ம­ரிப்பு, மற்றும் நிர்­மாணக் கைத்­தொழில் போன்ற துறை­களில் திறமை பெற்ற ஊழி­யர்­க­ளுக்­கான அவ­ச­ரத்­தே­வை­யினை பூர்த்தி செய்­வ­தற்கு, 10,000 இளை­ஞர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­வ­தற்­காக தனியார் துறை­யி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கின்றேன். இவ்­வாறு பயிற்சி பெற்­ற­வர்கள் இறு­தியில் குறித்த கைத்­தொ­ழிலில் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். தனியார் துறைக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் வகையில் அர­சாங்கம் மூன்று மாதங்­க­ளுக்கு மாத­மொன்­றுக்கு 10,000 ரூபா­வினை ஒவ்­வொரு பயி­லு­ந­ருக்கும் உத­வு­தொ­கை­யாக வழங்கும். இதற்­காக ரூபா 300 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    128. மாத்­தறை ஜேர்மன் பயிற்சி தொழில்­நுட்பக் கல்­லூரி மற்றும் ஹோட்டல் பயிற்சி பாட­சாலை ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக ரூபா 200 மில்­லி­யன்­களை ஒதுக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    129. நாட்டில் ஒவ்­வொரு நான்கு குடும்­பங்­க­ளுக்கும் ஒரு கணினி சொந்­த­மாகக் காணப்­ப­டு­கின்­றது. ஒவ்­வொரு வீட்­டுக்கும் பயிற்சி நெறி­களை தகவல்தொழில்­நுட்­பத்­தினை பயன்­ப­டுத்தி பெற்றுக் கொடுக்க முடி­யு­மென நான் நம்­பு­கின்றேன். 

    இதற்­காக களனிப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தேசிய இலத்­தி­ர­னியல் கற்கை மூல­வள நிலை­ய­மொன்­றினை ஸ்தாபிப்­ப­தற்கு முன் ­மொ­ழி­வ­துடன் 2 வருட காலப்­ப­கு­தியில் ரூபா 125 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு விரும்­பு­கின்றேன். இந்­நி­லை­ய­மா­னது தனியார் துறை­யி­ன­ருடன் இணைந்து இலத்­தி­ர­னியல் கற்றல் கையே­டு­களை உரு­வாக்கும். இப் பயிற்சி நிகழ்ச்­சித்­திட்­ட­மா­னது ஏற்றுக் கொள்­ளப்­பட்ட சான்­றுப்­ப­டுத்­து­த­லுடன் மேற்­கொள்­ளப்­படும்.
    இந்­நி­கழ்ச்­சித்­திட்டம் நிறை­வுற்­ற­துடன் இவ்­வா­றான பயிற்சி நிறு­வ­க­மொன்­றி­லி­ருந்து பெறப்­பட்ட ஏதேனும் சிறந்த சான்­றி­த­ழி­னை­யொத்த சான்­றி­த­லொன்று வழங்­கப்­படும். 

    சுகா­தாரத் துறை
    130. சுகா­தார சேவை­யினைச் சேர்ந்தவர் கள் மிகவும் குறைந்தவளங்களுடன் நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் தமது சேவை­யினை வழங்கி வருவ­துடன் பிர­தான சுகா­தார சுட்­டி­களை அடைந்து கொள்­வதில் உயர் வரு­மானம் பெறும் நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் எமது நாடு சிறந்த செய­லாற்­று­கை­யினைக் கொண்­டுள்­ளது என்­ப­தனை நான் இங்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன். யானைக்கால் நோய் மற்றும் மலரியா போன்­ற­வற்­றினை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான உலக சுகா­தார நிறு­வ­னத்தின் சான்­றி­த­ழினை பெற்றுக்கொள்ள முடி­யு­மா­க இருந்­த­மை­யா­னது கடந்த பல வரு­டங்­க­ளாக சுகா­தார சேவை­யினைச் சேர்ந்தவர்­க­ளி­னது அர்ப்­ப­ணிப்பு மற்றும் உயர் தொழில் ­த­கைமை என்­ப­வற்­றினை எடுத்துக்காட்­டு­கின்­றது. 

    131. மருந்துப் பொருட்கள் மற்றும் உப­க­ர­ணங்­களை தாங்கிக் கொள்ள முடி­யு­மான குறைந்த விலை­களில் கிடைக்கச் செய்­வ­தனை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு தேர்தல்­களில் நாம் வாக்­கு­று­தி­ய­ளித்­ததைப் போன்று எமது அர­சாங்கம் கடந்த வரு­டத்தில் தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்­கு­ப­டுத்­துகை அதி­கார சபைச் சட்­டத்­தினை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதன் மூலம் 48 மருந்துப் பொருட்­க­ளுக்­கான விலை­யினை அண்­ண­ள­வாக 40 சத­வீ­தத்­தினால் குறைப்­ப­தற்கு முடி­யு­மா­க­வுள்­ளது. சுகா­தாரத் துறைக்­கான பெறு­மதி சேர்க்­கப்­பட்ட வரியானது ஒரு சில குறிப்­பிட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­த­பட்­ட­மை­யினால் அர­சாங்­கத்­திற்கு ரூபா 17,000 மில்­லியன் வரு­மான இழப்பு ஏற்­பட்­டுள்­ளதை கட்­டா­ய­மாக கூற வேண்­டி­யுள்­ளது. 

    இது ஒருபொறுப்­புள்ள அர­சாங்கம் என்ற வகையில் நாங்கள் பொதுமக்கள் மீது தேவை­யற்ற சுமை­களை சுமத்­து­வது இல்லை. எமது அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­த­தனை நிறை­வேற்றக் கூடி­யது என்­ப­தனை இது நிரூ­பித்­துள்­ளது. 

    132. நாட்டில் ஏற்­ப­டு­கின்ற பெரும்­பா­லான மர­ணங்­க­ளிற்கு தொற்றா நோய்கள் கார­ண­மாக இருப்­ப­துடன் சனத்­தொகை மற்றும் நோய் விப­ர­வி­யலில் ஏற்­ப­டு­கின்ற மாற்­றங்­க­ளினால் நாம் புதிய சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்ளோம். புதிய சவால்­களை எதிர்­கொள்­கின்ற வகையில் எமது சுகா­தார சேவை வழங்கல் முறை­மை­யினை நாம் உறு­திப்­ப­டுத்த வேண்­டு­மென்­ப­துடன் மீள் ஒழுங்­கு­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது என்­பது தெளிவா கும். 

    இந்த வகையில் சுகா­தார பரா­ம­ரிப்பு மறு­சீ­ர­மைப்­புகள் தொடர்­பாக அர­சாங்­கத்­திற்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கான உயர்­மட்டக் குழு­வொன்­றினை நிய­மிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    சுகா­தா­ரத்­துறை மனி­த­வள தர­மேம்­பாட்டு நிகழ்ச்­சித்­திட்­ட­மொன்­றினை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    133. ஏற்­க­னவே நான் குறிப்­பிட்­டது போன்று எமது நாட்டில் பலர் தொடர்ந்து மோச­மான சிறு­நீ­ரக நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இது வெறு­மனே சுகா­தார பிரச்­சி­னை­யொன்­றாக மாத்­தி­ர­மன்றி சமூகப் பிரச்­சி­னை­யொன்­றா­கவும் காணப்­ப­டு­கின்­றது. 

    சிறு­நீ­ரக நோய் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு சுகா­தார அமைச்­சுக்கு ஏற்­க­னவே ரூபா 2,225 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­துள்­ள­துடன் மேலும் 2017 இல் ரூபா 750 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன் ­மொ­ழி­கின்றேன். 

    134. 2016 இல் ஏறக்­கு­றைய ரூபா 23,147 மில்­லி­யனை வைத்­தி­ய­சா­லை­களின் பௌதிக உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக ஒதுக்­கீடு செய்­துள்ளோம். இதில் வெளிநோயாளர் வார்ட்­டுகள், விபத் துச் சேவை வாட்­டுகள்,
    சத்­தி­ர­சி­கிச்சைக் கூடங்கள், ஆய்­வு­கூட கட்­டடத் தொகு­திகள் மற்றும் உப­க­ர­ணங்­களைக் கொண்ட உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மேம்­ப­டுத்­தப்­படும். 2017 இலும் எமது சுகா­தா­ரத்­துறை உட்­கட்­ட­மைப்பில் நாம் தொடர்ந்து முத­லீடு செய்­ய­வுள்ளோம். இதற்­காக நாம் ஏற்­க­னவே ரூபா 25,200 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­துள்ளோம். தெரிவு செய்­யப்­பட்ட மாகாண வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சைக் கழிவு முகா­மைத்­துவ முறை­மை­யினை தாபித்­ததன் மூலம் நோயாளர் நலன்­புரி சேவை­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு ரூபா 1,000 மில்­லி­யனை நாம் ஏற்­க­னவே வழங்­கி­யுள்ளோம். 

    135. தாதியர் பயிற்சிக் கல்­லூ­ரியை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக ரூபா 200 மில்­லி­யனை ஒதுக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    136. ஆரோக்­கி­ய­மா­னதும் துடிப்பு மிக்­க­து­மான இளம் தலை­மு­றை­யி­னரை நாம் பெற்­றி­ருத்தல் வேண்டும். தொற்­றல்லா நோயா­னது வயோ­தி­பர்­களை மாத்­தி­ர­மன்றி சிறு­வர்­க­ளுக்­கி­டை­யிலும் காணப்­ப­டு­வதை நான் நன்­க­றிவேன். அதே­போன்று தொற்றா நோய்­களில் நீரி­ழிவு, புற்­றுநோய், ஆஸ்­துமா என்­ப­னவும் பிர­தா­ன­மாகும். பெரும்­பா­லான தொற்றா நோய்கள் அவை உரிய நேரத்தில் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­மாயின் அவற்­றினை தடுப்­பது, பரா­ம­ரிப்­பது அல்­லது கட்­டுப்­ப­டுத்­து­வது முடி­யு­மா­ன­தொன்­றாகும். இந்த வகையில், ஒவ்­வொரு பாட­சாலைத் தவ­ணை­யிலும் நாட்­டி­லுள்ள ஒவ்­வொரு பாட­சா­லை­க­ளுக்கும் சுகா­தார அதி­கா­ரிகள் விஜயம் செய்­வ­தனை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான செயன்­மு­றை­யொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு சுகா­தார அதி­கா­ரி­களை கேட்டுக் கொள்­கின்றேன். இந்­நோக்­கத்­திற்­காக ரூபா 50 மில்­லி­யனை ஒதுக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    137.எனவே, நாட்டில் சிறு­நீ­ர­கநோய் மற்றும் ஏனைய பிர­தான தொற்றா நோய்கள் தொடர்­பான ஆராய்ச்­சி­க­ளுக்கு வச­தி­ய­ளிப்­ப­தற்­காக தேசிய விஞ்­ஞான மன்­றத்­திற்கு ரூபா 100 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    138. கொழும்­பி­லுள்ள சீமாட்டி றிஜ்வே வைத்­தி­ய­சாலை மற்றும் கண்­டி­யி­லுள்ள சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க சிறுவர் வைத்­தி­ய­சாலை ஆகிய சிறு­வர்­க­ளுக்­கான விசேட வைத்­தி­ய­சா­லைகள் இரண்டு மாத்­தி­ரமே இலங்­கையில் காணப்­ப­டு­கின்­றன. இலங்­கையில் பிறக்கும் ஒவ்­வொரு 1,000 குழந்­தை­க­ளிலும் 9.9 குழந்­தைகள் தமது 5 ஆவது பிறந்த தினத்­தினை கொண்­டா­டு­வ­தற்கு முன்­னரே இறந்­து ­வி­டு­கின்­றனர். மிலே­னிய அபி­வி­ருத்தி இலக்­குக்கு அமை­வாக ஐந்து வய­துக்குக் குறைந்த சிறுவர் இறப்பு வீத­மா­னது 1,000 இற்கு 4 ஆக காணப்­பட்­ட­துடன் நிலை­யான அபி­வி­ருத்தி இலக்­கா­னது ஐந்து வய­துக்குக் குறைந்த சிறு­வர்­களின் இறப்­பு­ வீ­தத்­தினை பூச்­சி­ய­ வீ­த­மாக மாற்­றி­யமைக் கும். 

    நிலை­யான அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடைந்து கொள்­வ­தற்­கான எமது அர்ப்­ப­ணிப்­பினை வழங்கும் வகையில் கராப்­பிட்­டிய, அம்­பாறை மற்றும் யாழ்ப்­பாணம் வைத்­தி­ய­சா­லை­களில் விசேட சிறுவர் பரா­ம­ரிப்பு தொகு­தி­களை ஸ்தாபிப்­ப­தற்கு ரூபா 1,000 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். நிந்­த­வூரில் ஆதார வைத்­தி­ய­சா­லை­யினை ஸ்தாபிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­வ­துடன் அதற்­காக ரூபா 200 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கும் கராப்­பிட்­டிய போதனா வைத்­தி­ய­சா­லையில் வாய்­வழி சுகா­தார தொகு­தி­யொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்­காக ரூபா 50 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கும் நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    139. காசல் வீதி மகப்­பேற்று வைத்­தி­ய­சா­லையை நவீன தொழில்­நுட்ப வச­தி­க­ளுடன் நாம் 2017 ஆம் ஆண்டில் மேம்­ப­டுத்­துவோம். நாட்­டி­லுள்ள இல­வச சுகா­தார வைத்­திய துறை வச­திகள் அரச தனியார் பங்­கு­டமை முறையின் கீழ் ரூபா 3,000 மில்­லியன் செலவில் அபி­வி­ருத்தி செய்­யப்­படும். 

    140. தல­சீ­மியா, லிம்­போமா, லிவ்­கே­மியா மற்றும் ஏனைய அவ்­வா­றான நோய்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு கண்டி வைத்­தி­ய­சா­லையில் எலும்பு மச்சை மாற்றுச் சிகிச்சை அல­கொன்­றினை ஸ்தாபிப்­ப­தற்கு ரூபா 500 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    141. சுகா­தார நலன்­புரி சேவையில் தகவல் தொழில்­நுட்­பத்­தினை பயன்­ப­டுத்­து­வது கட்­டா­ய­மா­ன­தாகும். எனவே, தொலை மருத்­துவ நிகழ்ச்­சித்­திட்­ட­மொன்­றினை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு தகவல் தொழில்­நுட்பத் துறை­யுடன் இணைந்து தெரிவு செய்­யப்­பட்ட ஆகக் குறைந்­தது 5 ஆதார வைத்­தி­ய­சா­லை­களை நான் ஊக்­கு­விக்­க­வுள்ளேன். 

    142. கிரா­மிய மட்­டத்தில் பொது சுகா­தார முறை­மையை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் பொதுச் சுகா­தார தாதி­களை நாம் தேவைக்­கேற்­ற­வாறு வேலைக்­க­மர்த்­துவோம். 

    143. வரவு – செல­வுத்­திட்டத் தயா­ரிப்பின் போது இடம்­பெற்ற எனது கலந்­து­ரை­யா­டல்­களின் போதுநாட்டில் தற்­பொ­ழுது போது­மான எண்­ணிக்­கையில் சுகா­தார மற்றும் போசனை நிபுணர்கள் இல்­லை­யென்­பதை அறிந்து ஆச்­ச­ரி­ய­ம­டைந்தேன். அடுத்த மூன்று வரு­டங்­க­ளுக்குள் சுகா­தார மற்றும் போஷாக்கு பணி­யா­ளர்­களின் எண்­ணிக்­கை­யினை 300 ஆக அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­வ­துடன் அதற்­காக ரூபா 50 மில்­லி­யனை ஒதுக்­கீடுசெய்­வ­தற்கு முன்­மொ­ழி­கின்றேன். 

    144. அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­களில் தனியார் துறை­யுடன் இணைந்து கட்­டணம் செலுத்­து­கின்ற வார்ட்­டு­களை ஸ்தாபிப்­ப­தற்கு முன்­மொ­ழி­வ­துடன் அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­களில் மருத்­துவ பரி­சோ­தனை ஆய்­வு­கூ­டங்­களை ஸ்தாபிப்­ப­தற்கும் தனியார் துறைக்கு அழைப்பு விடுக்­கின்றேன். 

    145. நாட்டில் பதிவு செய்­யாத மருந்து விற்­பனை நிலை­யங்கள் பெரும் எண்­ணிக்­கையில் காணப்­ப­டு­வ­துடன் தகைமை பெறாத மருந்­த­கர்­களும் குறிப்­பி­டத்­தக்­க­ளவு காணப்­ப­டு­கின்­றனர்.
    இந்­நி­லை­மை­யினை உட­ன­டி­யாகக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வருதல் வேண்டும். இந்த 29 வகையில் அனைத்து மருந்து விற்­பனை நிலை­யங்­களும் தேசிய மருந்துப் பொருட்கள் அதி­கார சபையின் கீழ் உட­ன­டி­யாக பதிவு செய்­யப்­ப­டுதல் வேண்­டு­மென்­ப­துடன் இதற்குக் கட்­டுப்­ப­டா­த­வர்­க­ளுக்கு 100,000 ரூபா அப­ரா­த­மாக விதிக்­கப்­படும். 

    146. ஆயுர்­வேத மருத்­துவத் துறையில் ஆராய்ச்சி மற்றும் அபி­வி­ருத்தி நோக்­கத்­தினை மைய­மாகக் கொண்டு ஆயுர்­வேத மருத்­துவ பட்­டப்­பின்­ப­டிப்பு நிறு­வ­கத்­தினை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு ரூபா 250 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    147. நாட்டில் இல­வச சுகா­தார பரா­ம­ரிப்புத் சேவை வழங்கல் முறை­மையின் தரத்­தினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நாம் அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்றோம்.
    இத்­து­றைக்கு நிதிக்கு மேல் நிதி­யினை வாரி வழங்­கிய போதிலும், பொது மக்கள் அவற்றின் தொகை­யினை அறி­வார்கள் என்­பதில் எனக்குச் சந்­தே­க­முள்­ளது. எனவே, ஒவ்­வொரு நோயா­ளியும் அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­க­ளி­லி­ருந்து வெளியேறும் போது அவர்­க­ளது நோயினை குணப்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சினால் அவர்­க­ளுக்­காக செல­வி­டப்­பட்ட தொகை­யினை சுட்­டிக்­காட்­டு­கின்ற செல­வினப் படி­வ­மொன்­றினை வழங்­கு­வ­தற்கு நான் சிபா­ரிசு செய்­கின்றேன். 

    இலங்­கையில் வியா­பாரம் மேற்­கொள்­வதை இல­கு­ப­டுத்தல்
    148. எமது அர­சாங்கம் ஆகக் குறைந்­த­ளவு சிவப்பு நாடாக்­க­ளுடன் வியா­பா­ரத்­தினை மேற்­கொள்­வ­தற்கு முடி­யு­மான சூழ­லினை உரு­வாக்­கு­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் காணப்­ப­டு­கின்­றது. தற்­பொ­ழுது நாம் இலகு வியா­பாரம் புரிதல் சுட்­டியில் 110 ஆவது இடத்தில் இருக்­கின்றோம் என்­ப­தனை இச் சந்­தர்ப்­பத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்­பு­கின்றேன். இந்நாட்டில் வியா­பா­ர­மொன்­றினை பதிவு செய்­வ­தற்கு முன்னர் வியா­பா­ர­மொன்று பின்­பற்­றப்­ப­ட­வேண்­டிய ஆகக் குறைந்­தது 8 படி­மு­றைகள் காணப்­ப­டு­கின்­றன. இது இத்­து­றையில் முன்­ன­ணியில் திகழ்­கின்ற நாடு­க­ளுடன் ஒப்­பிடும்போது சரா­சரித் தேவைக்கு அதி­க­மா­ன­தாகும்.
    இதனை 2020 ஆம் ஆண்­ட­ளவில் 5 செயன்­மு­றை­யாகக் குறைப்­பது எமது நோக்­க­மாகும். இத­னுடன் வேறு ஏனைய பல்­வேறு நட­வ­டிக்­கை­களின் கார­ண­மாக 2018 ஆம் ஆண்­ட­ளவில் உலகில் 70 ஆவது இடத்தில் எம்மை இருக்­கு­ம­ள­வுக்கு செய்ய முடியும். 

    149. இந்த வகையில் கம்­ப­னிகள் பதி­வா­ள­ரினை வாரத்தில் 7 நாட்­களும் தொழிற்­பாட்­டுக்­காக திறப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­வ­துடன் அந்­நோக்­கத்­திற்­காக உள்­நாட்டு இறை­வரித் திணைக்­களம் மற்றும் தொழில் திணைக்­களம் என்­ப­வற்­றினை வலுப்­ப­டுத்­து­வ­தற்கும் முன்­மொ­ழி­கிறேன். இதன்மூலம் வியா­பா­ர­மொன்­றினை ஆரம்­பிப்­ப­தற்­கான காலத்­தினை 10 நாட்­க­ளி­லி­ருந்து 4 நாட்­க­ளாக குறைப்­ப­தற்கு முடியும். 

    150. அனைத்து வியா­பா­ரங்­களும் பதிவு செய்­வ­தற்குத் தேவைப்­ப­டுத்­து­கின்ற தேசிய வியா­பார பதிவு அலு­வ­ல­க­மொன்றை ஸ்தா பிப்­ப­தற்குத் தேவை­யான சட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். எமது நாட்­டினால் கைச்­சாத்­தி­டப்­பட்ட வர்த்­தக உடன்­ப­டிக்­கைகள் முறை­யாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னவா என்­ப­தனை உறு­திப்­ப­டுத்தும் பணிக்­காக தேசிய வியா­பார வழக்குத் தொடுநர் ஒரு­வ­ரினை நிய­மிப்­ப­தற்கும் நாம் நட­வ­டிக்கை எடுப்போம். தேசிய வியா­பார பதி­வகம் மற்றும் வர்த்­தக வழக்குத் தொடு­நரின் அலு­வ­லகம் என்­ப­வற்­றினை ஸ்தாபிப்­ப­தற்கு ரூபா 50 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    151. சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்­சிகள் மிக விரை­வாக கடன்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு வச­தி­ய­ளிக்கும் வகையில் பாது­காக்­கப்­பட்ட கொடுக்கல் வாங்கல் சட்­டத்­திற்­கான திருத்­தங்­களை நாம் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்ளோம்.
    152. முத­லீ­டு­களைக் கவ­ரு­வ­தற்கு தெளி வான காணிக் கொள்­கை­யொன்று அவ­சி­ய­மாகும். இந்தவகையில், காணி­களின் உரித்­தினை எவ்­வித நிபந்­த­னை­யு­மின்றி வரை­ய­றுக்­கப்­பட்ட பொது கம்­ப­னி­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கான சட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். பெரும்­பான்­மை­யான வெளிநாட்டு பங்­கு­களைக் கொண்ட தனியார் கம்­ப­னிகள் காணி­களை நீண்­ட­கால அடிப்­ப­டையில் குத்­த­கைக்குப் பெறு­வ­தற்­கான அங்­கீ­காரம் வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். எவ்­வா­றா­யினும், அத்­த­கைய கம்­ப­னிகள் ஆகக் குறைந்­தது 150 பேருக்கு வேலை வாய்ப்­பினை வழங்­கு­வ­துடன் ரூபா 250 மில்­லி­யனை (காணியின் பெறு­மதி நீங்­க­லாக) முத­லீடு செய்து குறித்த அந்­தஸ்தினை ஆகக் குறைந்­தது 3 வரு­டங்­க­ளுக்கு பேணி வரு­தலும் வேண்டும். அவ்­வாறு, இல்­லா­து­விடின் 3 வருட இறு­தியில் ஒப்­பந்­தத்­தினை நிறை­வேற்­றா­மைக்­காக குத்­த­கைக்­கான 100 சதவீதம் உடன­டி­யாக அற­வி­டப்­படும். அத்­த­கைய குத்­தகைப் பெறு­ம­தி­யா­னது காணியின் சந்­தைப்­பெ­று­ம­தியில் அரச விலை மதிப்­பீட்­டா­ள­ரினால் தீர்­மா­னிக்­கப்­ படும். 

    153. தற்­பொ­ழுது வழக்­கி­லுள்ள 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்­ப­னிகள் சட்­டத்­திற்கு அமை­வாக, 70 வய­தை­ய­டைந்த தலைவர் மற்றும் பணிப்­பாளர் சபை உறுப்­பி­னர்கள் அத்­த­கைய சபையில் பணி­யாற்ற முடி­யாது எவ்­வா­றா­யினும், பணிப்­பாளர் சபை தலைவர் மற்றும் உறுப்­பி­னர்கள் மற் றும் உரி­மை­யா­ளர்கள் 70 வய­தி­னையும் தாண்டி பணிப்­பாளர் சபையில் தொடர்ந்து சேவை­யாற்­று­வ­தற்கு முடி­யு­மான வகையில் இவ்­வ­ரை­ய­றை­யினை நீக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.
    154. நிதித்­து­றையில் உறு­தி­யான ஒழுங்­க­ப­டுத்­துகை செயன்­மு­றை­யொன்று காணப்­பட்ட போதும் பொரு­ளா­தார செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான ஆற்­ற­லினை நீதிக் குப் புறம்­பான முறையில் வழங்­க­மு­டி­யாது என்­ப­தனை நாம் நம்­பு­கின்றோம்.
    இந்த வகையில், ரூபா 500,000 கடன் வரை­ய­றைக்­குட்­பட்ட கடன் பெறு­நர்­களின் கடன் வர­லாற்­றினை வழங்­கா­தி­ருக்­கு­மாறு கடன் தகவல் பணி­ய­கத்­திற்கு நான் வேண்­டு கோள் விடுக்­கின்றேன்.
    155. கட­னி­றுக்க வகை­யின்மை மற்றும் வங்­க­ரோத்து நிலை தொடர்­பாக நாட்டில் காணப்­படும் சட்­டங்­களை நவீன கால நடை­மு­றை­க­ளுக்­கேற்ற வகையில் திருத்­து­வ­தற்­கான தேவை காணப்­ப­டு­வ­தனால் பொருத்­த­மா­னதும் வினைத்­திறன் மிக்­க­து­மான சட் ­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுத்தல் வேண்டும்.
    156. வரவு – செல­வுத்­திட்ட கலந்­து­ரை யா­டல்­களின் போது, பல வியா­பா­ரிகள் தமது கடை­களை ஆகக் குறைந்­தது இரவு 11 மணி ­வ­ரைக்கும் திறந்­தி­ருப்­ப­தற்கு விரும்­பு­வ­தாக தமது கருத்தை தெரிவித்­தனர். தனியார் பேரூந்து உரி­மை­யா­ளர்கள் சங்­கமும் இரவு 11.00 மணியின் பின்னர் பேருந்து சேவை­களை வழங்­கு­வதன் மூலம் இதற்கு ஒத்­து­ழைப்பு வழங்க உடன்­பட்­டி­ருப்­ப­தனால் குறித்த கோரிக்­கை­யினை நிறை­வேற்­று­வ­தற்கு நான் ஊக்­க­ம­ளிக்­கின்றேன்.
    157. முறை­யற்ற கொடுக்கல் வாங்­கல்­க ளில் இருந்து நாட்டின் வெளிநாட்டு ஒதுக் கு­களை பாது­காக்­கும்­ மு­க­மாக செலாவணி கட்­டுப்­பாட்டுச் சட்டம் நீக்­கப்­பட்டு வெளி நாட்டுச் செலவாணி சட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும்.
    வலுப்­ப­டுத்­தப்­பட்ட, சிறந்த கொடுப்­ப­னவு வழங்­கப்­பட்ட ஊழி­யப்­படை
    158. ஊழி­யப்­ப­டையில் மூன்­றி­லொரு பகு­தி­யினர் முறைசார் துறை­களில் ஈடு­பட்­டுள்­ள­துடன் எஞ்­சிய மூன்­றி­லி­ரண்டு பகு­தி­யினர் முறை­சாரா துறையில் ஈடு­பட்­டுள்­ளனர். முறைசார் துறை­யா­னது தொழில் சட்­டங்­க­ளினால் மிகவும் பாது­காக்­கப்­பட்­ட­துடன் அதில் நெகிழ்­வான பணி நேரங்கள், பகு­தி­நேர வேலை அல்­லது 45 மணித்­தி­யா­லங்கள் மற்றும் வாரத்தில் ஐந்­தரை நாட்கள் சேவையில் ஏதேனும் மாற்­றங்கள் என்­பன காணப்­ப­ட­மாட்­டாது.
    அதற்கு மாற்­ற­மாக ஊழி­யப்­ப­டையில் பெரும்­பா­லா­ன­வர்கள் முறை­சாரா துறையில் ஈடு­பட்­டுள்­ள­துடன் அவர்கள் தொழில் சட்­டங்­க­ளி­லி­ருந்து எவ்­வித பாது­காப்­பையும் பெற்­றி­ருக்­க­வில்லை. இந்த வகையில் எமது ஊழி­யப்­ப­டையில் பெரும்­பா­லா­ன­வர்கள் இந்­நாட்­டி­லுள்ள இறுக்­க­மான தொழில் சட்­டங்­க­ளி­லி­ருந்து எவ்­வித நன்­மை­யி­னையும் பெற்றுக்கொள்­வ­தில்லை.
    159. தற்­பொ­ழுது நடை­மு­றை­யி­லுள்ள தொழில் சட்­டங்கள் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில் 60 சத­வீ­த­மாகக் காணப்­படும் சேவைத் துறையின் கேள்­வி­யினை ஈடு செய்­வ­தற்­கான சவால்­களை எம்மில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் அடுத்த சில வரு­டங்­களில் சுற்­றுலா மற்றும் தகவல் தொழில்­நுட்ப கைத்­தொழில் துறை­யினை பிர­தான வளர்ச்சி ஊக்­கு­விப்­பா­ளர்­க­ளாக பதிவு செய்­வ­தற்கு மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நவீன சேவைத் துறையில் எமது போட்டி பயன் வழங்கப்­பட்­டுள்­ள­துடன் நாட்­டுக்குள் அறி வுச் செயன்­முறை வெளியார் சேவை (KPO), நீதிச் செயன்­முறை வெளியார் சேவை (LPO) மற்றும் வியா­பார செயன்­முறை வெளியார் சேவை (BPO) கைத்­தொ­ழில்­களை கவர்கின்ற அளவு நாம் சிறந்த இடத்தில் காணப்­ப­டு­கின்றோம். எவ்­வா­றா­யினும், அறிவுச் செயன்­முறை வெளியார் சேவை மற்றும் வியா­பாரச் செயன்­முறை வெளியார் சேவை ஆகிய இரண்டு தொழிற்­று­றை­களும் இரவு நேர வேலை, பகுதி நேர வேலை மற்றும் வீட்­டுடன் கூடிய வேலை என்­பன போன்ற நெகிழ்வுப் போக்­கான வேலை மணித்­தி­யா­லங்­களை தேவைப்­ப­டுத்­து­கின்­றன. தகவல் தொழில்­நுட்ப மற்றும் சுற்­று­லாத்­து­றையின் சம்­ப­ளங்கள் ஏற்­க­னவே உயர் மட்­டத்தில் காணப்­ப­டு­வ­துடன் உரிய வளர்ச்சிப் போக்­கி­னையும் காட்­டு­கின்ற அதே­வேளை சம்­ப­ளங்­களை மாத்­திரம் உயர்ந்த போக்கில் காண­மு­டி­யு­மா­க­வுள்­ளது. தொழில்­நுட்ப வளர்ச்சி, தொழில் வாய்ப்­புகள் என்­பன குறிப்­பி­டத்­தக்­க­ளவு மாற்­ற­ம­டைந்­தி­ருப்­ப­தனை நாம் ஏற்றுக் கொள்­ளுதல் வேண்டும். எவ்­வா­றா­யினும், சேவைத்­து­றையில் தொழில்­நுட்­ப ­ரீ­தியில் குறிப்­பி­டத்­தக்க ஆற்­ற­லினை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு தொழில்­சட்­டங்­க­ளுக்­கான திருத்­தங்கள் அத்­தி­ய­வ­சி­ய­மா­ன­வை­யாகும். அத்­த­கைய திருத்­தங்­க­ளினை மேற்­கொள்ளும் போது தொழில் பாது­காப்பு தொடர்பில் எவ்­வித விட்­டுக்­கொ­டுப்பும் காணப்­படமாட்­டாது என்­ப­துடன் சிறந்த கொடுப்­ப­னவு வழங்­கப்­ப­டு­கின்ற புதிய தொழில்கள் வழங்­கப்­படும் அதே­வேளை அவற்றில் எமது இளைஞர், யுவ­தி­களை நாம் ஈடு­ப­டுத்த முடி­யு­மென உங்­க­ளுக்கு உறுதி வழங்­கு­கின்றேன். தேசிய தொழிற்­சங்க பேர­வையின் ஒத்­து­ழைப்­பினை நான் பாராட்­டு­வ­துடன் ஊழி­யர்கள் மற்றும் தொழில் வழங்­கு­நர்கள் ஆகிய இரு சாராரும் உடன்­படும் வகையில் தொழில் சட்­டங்­களை திருத்­து­வ­தற்கு அவர்கள் சிபா­ரி­சு­களை வழங்­கினர்.
    அ. தனியார் துறை­யி­ன­ருக்கு 45 மணித்­தி­யா­லங்கள் மற்றும் வாரத்தில் 5 நாட்கள் அதே­வேளை அர­சாங்­கத்­து­றைக்கு வாரத்தில் 40 மணித்­தி­யா­லங்கள் என்ற நெகிழ்வுபோக்­கு­டைய வேலை நேரங்கள்,
    ஆ. ஒப்­பந்த தொழில்கள் 6 மாதங்­களில் இருந்து ஒரு வரு­டத்­திற்கு விரி­வாக்­கப்­படும்.
    இ. செய­லாற்­று­கை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்ட வேத­னா­திகள்.
    160. பாது­காப்பு, துப்­ப­ர­வேற்­பாடு, சிற்­றுண்டிச் சாலைகள் மற்றும் போக்­கு­வ­ரத்துச் செயற்­பா­டு­க­ளுக்கு மாத்­திரம் மனி­த­வள சேவை­களை வரை­ய­றுப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன்.
    161.ஊழியர் சேம­லா­ப­நிதி, ஊழியர் நம்­பிக்கை நிதி மற்றும் தொழில் திணைக்­களம் என்­ப­வற்­றினால் வெவ்­வே­றான தரவுத் தளங்­களை பரா­ம­ரிப்­ப­தனால் பல சிக்­கல்கள் உரு­வா­கி­யுள்­ளன. ஆகவே முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள மத்­தி­யப்­ப­டுத்­தப்­பட்ட ஓய்­வூ­திய நிதி­யத்தின் மூலம் ஊழி­யர்­க­ளது தரவுத் தளங்கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்டு மேலும் வலுப்­ப­டுத்­தப்­ப­டு­மென நாம் உறு­தி­ய­ளிக்­கின்றோம்.
    சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்சி
    162. சிறிய மற்றும் நடுத்­தர தொழில்­ மு­யற்சித் துறை­யா­னது பொரு­ளா­தா­ரத்தில் 50 சத­வீ­த­மாகக்காணப்­ப­டு­வ­துடன் வளர்ச்­சியின் பிர­தான கார­ணி­யா­கவும் காணப்­ப­டு­கின்­றது. இத்­து­றையின் விரி­வாக்கம் மற்றும் வளர்ச்­சி­யா­னது வரை­ய­றுக்­கப்­பட்ட நிதிக் கிடைப்­ப­ன­வினால் மிகவும் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.
    நிதி­யியல் அடிப்­படை வியா­பாரத் திட்­டத்­திற்கு மாற்­ற­மாக பாரம்­ப­ரிய பிணை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்ட நிதி­யீட்டல் எண்­ணக்­க­ரு­வினை தொடர்ந்தும் வங்­கிகள் பின்­பற்றி வரு­வ­தனால் இந்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்த வகையில், பிணைப்­பொ­றுப்­பற்ற வகையில் சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்­சித்­து­றைக்கு சிறந்த நிதி­யீட்­டத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் வகையில் சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்சி கடன் உத்­த­ர­வாதத் திட்­ட­மொன்­றினை நாம் ஏற்­க­னவே ஆரம்­பித்­துள்­ள­துடன் அதற்­கான ஆரம்ப முத­லீ­டாக ரூபா 500 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். இத்­திட்­டத்­தின வெற்­றி­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஆசிய அபி­வி­ருத்தி வங்­கி­யா­னது அர­சாங்­கத்தின் அர்ப்­ப­ணிப்­பாக 100 மில்­லியன் ஐ.அ.டொல­ரினை வழங்கும். இதற்கு மேல­தி­க­மாக சிறிய மற்றும் நடுத்­தர தொழில்­மு­யற்­சிகள் துறைக்கு கடன் வழங்­கு­வ­தற்­காக வங்­கிகள் அவற்றின் கடன் அளவில்
    ஆகக் குறைந்­தது 10 சத­வீ­தத்­தினை வழங்­கு­மாறு நாம் வங்­கி­க­ளுக்கு பணிப்­புரை வழங்­கு­கின்றோம்.
    163. விவ­சாயம், கடற்­றொழில், கால்­நடை, மலர்ச்­செடி வளர்ப்பு, வீட்டுத் தோட்டச் செய்கை, மென்­பொ­ரு­ளியல், அச்­சுத்­தொழில் சுற்­றுலா, கைவினைப் பொருட்கள் மற்றும் ஆடைத் தொழிற்­றுறை என்­ப­வற்றில் ஈடு­பட்­டுள்ள சிறிய மற்றும் நடுத்­தர தொழில்­மு­யற்­சி­யா­ளர்­க­ளுக்கு குறித்த தொழிற்­று­றையின் புரள்வு மற்றும் ஊழிய உரு­வாக்க ஆற்றல் என்­ப­வற்றில் தங்­கி­யுள்ள சலுகைக் கடன் திட்­டத்­தினை வழங்­கு­வதன் மூலம் ஒத்­து­ழைப்பு வழங்­கப்­படும். ரூபா 25 மில்­லியன் முதல் ரூபா 250 மில்­லியன் வரை­யான புரள்­வி­னையும் 10 50 ஊழி­யர்­க­ளையும் கொண்ட சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்­சி­யொன்­றுக்கு வட்டி மானி­ய­மாக 50 சத­வீதம் வழங்­கப்­ப­டு­வ­துடன் ரூபா 250 மில்­லியன் - ரூபா 750 மில்­லியன் வரை­யான புரள்­வி­னையும் 50 300 ஊழி­யர்­க­ளையும் கொண்ட தொழில் முயற்­சி­யொன்­றுக்கு 25 சத­வீத வட்டி மானியம் வழங்­கப்­படும். இத்­திட்­டத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தற்கு ரூபா 750 மில்­லி­யனை ஒதுக்­கீடுசெய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    164. ஒரு காலத்தில் சிறப்­புற்று விளங்­கிய ஆடை மற்றும் கைத்­தறி கைத்­தொ­ழி­லினை உள்­நாட்டுச் சந்­தையில் குறிப்­பிடத் தக்­க­தா­கவும் பல தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்கக் கூடி­ய­தா­கவும் மீண்டும் எழுச்சி பெறச் செய்­வ­தற்கு நாம் ஆர்­வத்­துடன் இருக்­கின்றோம். இந்த வகையில் கைத்­தொழில் அபி­வி­ருத்திச் சபை­யி­னூ­டாக பயிற்சி மற்றும் தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை வழங்­கு­வ­தற்கு சிபா­ரிசு செய்­யப்­ப­டு­கின்­றது. சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்­சி­தது் றைக்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் வகையில் தேவை­யான அறிவு மாற்றல் மற்றும் கைத்­தொழில் பேட்­டை­களை தர­மு­யர்த்­து­வ­தற்கு தேவை­யு­டைய கைத்­தொ­ழி­லா­ளர்­க­ளுடன் தமது ஈடு­பாட்­டினை அதி­க­ரிப்­ப­தற்கு கைத்­தொழில் அபி­வி­ருத்திச் சபை­யிடம் வேண்­டுகோள் விடுக்­கின்றேன். இந்­நோக்­கத்­திற்­காக ரூபா 500 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு முன்­மொ­ழி­கின்றேன். 

    165. ஒதுக்­கப்­பட்ட செப்பு, பித்­தளை மற்றும் உருக்கு கைத்­தொ­ழிலில் 300,000 இற்கும் அதி­க­மா­ன­வர்கள் ஈடு­பட்­டுள்­ளனர். அவர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் சிறி­ய­ள­வி­லான தொழில்­மு­யற்­சி­யா­ளர்கள் என்­ப­துடன் சர்­வ­தேச விலைத் தளம்பல் கார­ண­மாக சேக­ரிக்­கப்­பட்ட கழிவு உலோ­கப ் பொருட்­களை விற்­பனை செய்­வதில் மிக மோச­மான பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். கழி­வி­ரும்பு சேக­ரிப்­பா­ளர்­க­ளுக்கு சர்­வ­தேச விலை­க­ளுக்­கேற்ப நியா­ய­மான விலை­யினை வழங்­கு­மாறு உள்­நாட்டு உருக்கு உற்­பத்­தி­யா­ளர்­க­ளிடம் வேண்­டு­வ­துடன், அவற்­றுக்­கான பெறு­மதி சோ்ப்பினை ஊக்­கு­விப்­பதன் மூலம் அவற்­றினை மூலப் பொரு­ளாக ஏற்­று­மதி செய்­வ­தனை குறைக்­கு­மாறு கேட்டுக் கொள்­கின்றேன். 

    166. உள்­நாட்டு கலை­ஞர்­களின் கைவே­லை­களை காட்­சிப்­ப­டுத்­து­வதில் லக்­சல பிர­தான பங்கு வகிப்­ப­தற்கு நான் ஊக்­க­ம­ளிக்­கின்றேன். தற்­பொ­ழுது இந்த உள்­நாட்டு கலை­ஞர்கள் பல்­வேறு பொரு­ளா­தாரப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­கின்­றனர். எனவே, குறிப்­பி­டத்­தக்க எண்­ணிக்­கை­யி­லானோர் இக்­கைத்­தொ­ழிலில் ஈடு­பட்­டுள்­ள­தனால் அவர்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வு­களை ஆகக் குறைந்­தது ஒரு மாதக் காலப்­ப­கு­திக்குள் வழங்­கு­வ­தனை உறுதி செய்­யு­மாறு நான் லக்­ச­ல­வினை வேண்டிக் கொள்­கின்றேன். 

    167. மொத்த விற்­ப­னையில் ஈடு­பட்­டுள்ள குறிப்­பாக கைவினைப் பொருட்கள், ஆடை மற்றும் பாதணித் தயா­ரிப்புக் கைத்­தொ­ழில்­களைப் புரியும் சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு வச­தி­ய­ளிப்­ப­தற்­காக அரச தனியார் பங்­கேற்­புடன் கொழும்பில் பிரத்­தி­யேக கைவினை சந்­தைப்­ப­டுத்தல் நிலையம் ஒன்­றினை தாபிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    168. கூரை­யோடு மற்றும் தரை­யோட்டுக் கைத்­தொ­ழி­லா­னது 375,000 நேரடி மற்றும் மறை­முக வேலை வாய்ப்­பினை வழங்­கி­யுள்­ள­துடன், நாட்டில் காணப்­ப­டு­கின்ற பல்­வேறு சட்ட விதி­க­ளினால் அதன் மூலப்­பொ­ரு­ளான களி­மண்னைப் பெற்றுக் கொள்­வதில் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­யுள்­ளது. அதி­மே­தகு சனா­தி­ப­தி­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­வாறு, இப் பிரச்­சி­னை­யினை ஆராய்­வ­தற்கு அனைத்துத் தரப்­பி­ன­ரையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உயர் அதி­காரம் மிக்க குழு­வொன்று நிய­மிக்­கப்­படும். பெறு­மதி சோ்ப்பு மற்றும் வேலை­வாய்ப்பு உரு­வாக்­கத்­தினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு மினுக்­கப்­ப­டாத ஓடு­க­ளுக்கு பெறு­மதி சோ்ப்பதற்­கான துணை நிறு­வ­னங்­களின் சாத்­தி­யப்­பா­டு­களை ஆராய்­வ­தற்கு ஊக்­க­ம­ளிக்­கின்றேன். 

    169. எமது நாடு கடலால் சூழப்­பட்ட தீவொன்­றாக இருப்­பினும், உப்­பினை இறக்­கு­மதி செய்­வது விந்­தை­யா­ன­தொன்­றாகும். இதனால், அரச தனியார் பங்­கேற்பின் மூலம் இத்­து­றைக்கு அதி­க­மான முத­லீட்டு வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    170. இலங்கை மத்­திய வங்­கி­யினால் தொழிற்­ப­டுத்­தப்­படும் சௌபாக்­கிய மற்றும் ஸ்மைல்ஸ் போன்ற சலு­கைக்­கடன் மற்றும் உத்­த­ர­வாதத் திட்­டங்கள் அனைத்­தையும் ஏனைய கடன் திட்­டங்­க­ளுடன் இணைக்கும் வகையில் 2017 மார்ச் 31 ஆம் திக­திக்கு முன்னர் பொதுத் திறை­சோிக்கு மாற்­றப்­படும். முத­லீ­டுகள் 

    171. கௌரவ சபா­நா­யகர் அவர்­களே, முத­லீ­டுகள் நிலை­யான வளர்ச்சி மற்றும் அதனைப் பேணு­வதில் மிக முக்­கிய பங்கு வகிக்­கின்­றது. கடந்த தசாப்­தத்தில் முத­லீ­டுகள் மொ.உ.உற்­பத்­தியில் 30.1 சத­வீ­த­மாக பேணப்­பட்­டுள்ள போதிலும், அதன் பெரு­ம­ள­வி­லான பகுதி அர­சாங்கத் துறை­யி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. இதன் விளை­வாக நாட்டில் படு­கடன் சுமை­யா­னது ஏனைய நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் மொ.உ.உற்­பத்­தியில் 76 சத­வீ­த­மாக அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றது. அதே­வேளை, தனியார் துறை முத­லீ­டுகள் எவ்­வித வளர்ச்­சி­யு­மின்றி காணப்­ப­டு­கின்­றது. எவ்­வா­றா­யினும் பாரிய கடன் சுமையின் மூலம் எமது அர­சிறைத் துறை­யா­னது நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்­ள­துடன் தொடர்ந்து படு­கடன் சுமை­யினை அதி­க­ரிப்­பது சிறப்­பா­க­வி­ருக்­கு­மென நான் நினைக்­க­வில்லை. தனியார் துறை முத­லீ­டு­க­ளுக்கு வச­தி­ய­ளிப்­ப­துடன் தனியார் மற்றும் அர­சாங்­கத்­துறை என்­ப­வற்­றுக்­கி­டையில் பங்­கேற்­பினை ஏற்­ப­டுத்­து­வ­துமே இதற்­கான மாற்­றீ­டாகும். பெறு­மதி சோ்ப்பு மற்றும் தொழில் உரு­வாக்கம் கார­ண­மாக பொரு­ளா­தா­ரத்தில் தாக்கம் ஏற்­பட்­டுள்ள துறை­களில் முத­லீ­டு­களை நாம் ஊக்­கு­வித்தல் வேண்டும். விவ­சாயம், உற்­பத்தித் துறை, கடற்­றொழில், அலங்­கார மீன் வளர்ப்பு, சூரிய கலங்­களின் தயா­ரிப்பு, கால்­நடை, கோழி வளர்ப்பு மற்றும் சுற்­றுலா போன்ற துறை­களில் உள்­நாட்டு தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்கு நாம் ஒத்­து­ழைப்பு வழங்­க­வி­ருக்­கின்றோம். 

    172. இதற்­காக வேண்டி, இலங்­கைக்கு அதி­க­ள­வான முத­லீட்டு வச­தி­களை பெற்றுத் தரக்­கூ­டிய அபி­வி­ருத்­திக்­கான முக­வ­ராண்­மை­யினை நாம் தாபிப்போம். எவ்­வா­றா­யினும், முத­லீடு தொடர்­பான எந்­த­வொரு தீர்­மா­னமும் 50 நாட்­க­ளுக்கு அதி­க­மான காலத்­தினை தேவைப்­ப­டுத்­து­வ­துடன் அத்­த­கைய முத­லீ­டுகள் மற்றும் கருத்­திட்­டங்கள் மேல­திக செயன்­மு­றை­க­ளுக்­காக தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்­சுக்கு பாரப்­ப­டுத்­தப்­படும். 

    173. அதே­வேளை, திற­முறை அபி­வி­ருத்தி மற்றும் சர்­வ­தேச வர்த்­தக அமைச்­சா­னது நாட்டில் மேற்­கொள்­ளப்­படும் பிர­தான முத­லீ­டு­க­ளுக்­கான ஊக்­கு­விப்­பு­க­ளுக்கு அங்­கீ­காரம் வழங்­கு­வ­தற்­காக திறை­சோிக்கு சிபா­ரி­சினை வழங்கும். 

    174. எமது அர­சாங்­க­மா­னது சொத்­துக்கள் மற்றும் வரு­மா­னத்தின் சம­மான பகிர்வு உரு­வாக்­கத்­தினை உறு­திப்­ப­டுத்­து­கின்ற பொரு­ளா­தாரக் கொள்­கை­யொன்­றினை அர்ப்­ப­ணிப்­புடன் மேற்­கொள்­ள­வுள்­ளது. தலைக்­கு­ரிய மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வடக்கு, கிழக்கு மற்றும்
    ஊவா மாகா­ணங்­களில் மிகக் குறை­வாகக் காணப்­ப­டு­வ­துடன் இந் நிலை­மை­யினைச் சீராக்­கு­வ­தற்கு குறிப்­பி­டத்­தக்­க­ளவு முயற்சி தேவைப்­ப­டு­கின்­றது. இதற்­காக வட மாகா­ணத்தில் முத­லீ­டு­களை மேற்­கொள்­கின்ற வியா­பார முயற்­சி­க­ளுக்கு 200 சத­வீத மூல­தனக் கொடுப்­ப­ன­வு­களை வழங்­கு­வ­தற்கும் ஊவா மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் 3 மில்­லியன் ஐக்­கிய அமொிக்க டொலர்­க­ளுக்கு அதி­க­மான (காணி தவிர்ந்த) முத­லீ­டு­களை மேற்­கொளவ் துடன் புதிய தொழில்­வாய்ப்­புகள் 250 இனை உரு­வாக்­கு­கின்ற வியா­பார தொழில் முயற்­சி­க­ளுக்கு 100 சத­வீத மூல­தனக் கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். முறையே 500 அல்­லது 800 புதிய தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்கும் தொழில்­ மு­யற்­சி­க­ளுக்கு 3 அல்­லது 5 வரு­டங்­க­ளுக்கு 50 சத­வீத வரி விடு­மு­றையும் வழங்­கப்­படும். 

    175. கௌரவ சபா­நா­யகர் அவர்­களே, அதிக தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக முத­லீ­டு­களில் அர­சாங்கம் என்ற வகையில் பங்­கா­ள­ராக இருப்­ப­தற்கு நாம் பின்­நிற்­ப­தில்லை என்­ப­துடன் ஆபத்­தினை பகிர்ந்து கொள்­வ­தற்கும் தயா­ராக இருக்­கின்றோம். இந்த வகையில் 5 100 மில்­லியன் ஐ.அ.டொ (காணி பெறு­மதி நீங்­க­லாக) முத­லீ­டு­களைக் கொண்ட ஏதேனும் உள்­நாட்டு மற்றும் வௌிநாட்டுக் கம்­ப­னி­யொன்று 40 சத­வீ­தத்­திற்கு அதி­க­மான பெறு­மதி சோ்ப்பினை கொண்­டி­ருப்­ப­துடன் 500 வேலை வாய்ப்­பையும் கொண்­டி­ருப்பின் தொழிற்­பாட்­டினை ஆரம்­பித்துஇரண்டு வருட இறு­தியில் முத­லீட்டில் 5 சத­வீதம் கொடை­யாக வழங்­கப்­படும். இந் நிலைமை 5 வரு­டங்­க­ளுக்கு பேணப்­ப­டு­மாயின் அர­சாங்கம் முத­லீட்­டினை ஆரம்ப முத­லீட்டின் 5 சத­வீ­தத்­தினால் மேலும் அதி­க­ரிக்கச் செய்யும். அத்­த­கைய வியா­பார நிறு­வ­னங்­க­ளுக்கு 100 சத­வீத மூல­தனக் கொடுப்­ப­ன­வி­னையும் நாம் வழங்­க­வுள்ளோம். 

    176. ஐ.அ. டொலர் 100 500 மில்­லி­ய­னுக்கு அதி­க­மான பிர­தான முத­லீ­டு­க­ளுக்­கா­கவும் ஐ.அ. டொலர் 500 மில்­லி­ய­னுக்கு அதி­க­மான முத­லீ­டு­களும் எமது திட்­டத்­தினை மாற்­றி­ய­மைப்­ப­துடன் வரி விடு­மு­றை­க­ளுடன் விசேட ஊக்­கு­விப்பு பொதி­யொன்­றினை நாம் வடி­வ­மைக்­க­வுள்ளோம். 

    177. அவர்­க­ளது வியா­பா­ரங்கள் மற்றும் முத­லீ­டு­களின் தொழிற்­பாட்­டுக்கு வச­தி­ய­ளிக்கும் வகையில், அத்­த­கைய முத­லீட்­டா­ளர்கள் மற்றும் தொழில்­நி­பு­ணத்­துவம் மிக்க ஊழி­யர்­க­ளுக்கு 5 வருட பல்­நு­ழைவு வீசா ஒன்­றினை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    178. குறிப்­பி­டத்­தக்க வளர்ச்சிப் போக்­கினைப் பதி­வாக்­கி­யுள்ள நிர்­மாணக் கைத்­தொ­ழிற்­று­றைக்கு உத்­வேகம் வழங்கும் வகையில், முன் பொருத்­தப்­பட்ட கட்­ட­மைப்­பு­க­ளுக்கு ஏற்­பு­டை­ய­தான 25 சத­வீத செஸ் வரி­யினை நீக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    179. கௌரவ சபா­நா­யகர் அவர்­களே, உற்­பத்­தித்­திறன் அதி­க­ரிப்பு இயந்­தி­ரங்கள் மற்றும் உப­க­ர­ணங்­களின் மூலம் மூல­தன உள்­ளீ­டா­னது எமது வியா­பா­ரங்­க­ளுக்கு வலு­சோ்ப்­ப­தாகும். எனவே, எமது வியா­பார தொழில்­மு­யற்­சி­களின் ஆற்­ற­லினை மேம்­ப­டுத்­து­வ­தற்கு கைத்­தொழில் வாணி­பத்­துறை அமைச்­சினால் அங்­கீ­க­ரிக்­கப்­படும் உயர் தொழில்­நட்ப, தன்­னி­யக்க இயந்­தி­ரங்கள் மற்றும் உப­க­ர­ணங்­களை இறக்­கு­மதி செய்யும் போது துறை­முக மற்றும் விமான நிலைய அற­வீட்­டுக்கு 75 சத­வீத விலக்­க­ளிப்­பினை வழங்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    180. தற்­பொ­ழுது வௌிநாட்டு முத­லீ­டு­களில் உள்­நாட்டுக் கம்­ப­னி­க­ளினால் பெறப்­படும் மூல­தனப் பெறு­கைகள் உட­ன­டி­யாக இலங்கை ரூபா­வுக்கு மாற்­றப்­ப­டுதல் வேண்டும். இக் கம்­ப­னிகள் மூல­த­னத்­தினை பெற்­றுள்­ளன என்ற வகையில் அத்­த­கைய உள்­நாட்டு கம்­ப­னிகள் பெற்றுக் கொண்ட பணத்தில் ஆகக் குறைந்­தது 50 சத­வீ­தத்­தினை பிணை­யங்கள் முத­லீட்டு கணக்­கிற்கு
    மாற்­றுதல் வேண்டும். அவ்­வாறு புரியும் போது வௌிநாட்டு நிறு­வ­னங்­களில் மீள் முத­லீடு செய்ய அவர்­க­ளினால் முடியும். 

    181. இந்­தியா மற்றும் இந்­தோ­னே­சியா ஆகிய நாடு­களின் அனு­ப­வங்­களைக் கொண்டு, ஆகக் குறைந்த வரை­ய­றை­க­ளுடன் வௌிநாட்டுச் செலா­வணி வரு­மா­னத்­தினை அதி­க­ரிப்­ப­தற்கு வசதி செய்யும் வகையில் முத­லீட்டு உட்­பாய்ச்சல் முகா­மைத்­துவச் சட்­ட­மொன்­றினை மிக­வி­ரைவில் அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். இலங்கை மற்றும் ஏனைய நாடு­க­ளுக்­கி­டையில் காணப்­படும் வட்டி வீதத்­திற்­கி­டை­யி­லான வேறு­பா­டு­களின் பயனை அடைந்து கொள்­வ­தற்கு நாங்கள் வௌிநாட்டுக் கம்­ப­னி­களை அழைக்­கின்றோம். அத்­த­கைய வியா­பா­ரத்­திற்­கான சர்­வ­தேச வியா­பார ஏற்­பா­டொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு முடி­யு­மான திட்­டங்­களை நாம் உறு­திப்­ப­டுத்­த­வுள்ளோம். 

    182. கௌரவ சபா­நா­யகர் அவர்­களே, இந்­திய சமுத்­தி­ரத்தில் எமது உபாய ரீதி­யான இட அமை­வினை சிறந்த முறையில் பேண வேண்­டி­யுள்­ளது. சட்டம் மற்றும் ஒழுங்­கினை தர­மு­யர்த்தல், அர­சியல் ஸ்திரத்­தன்­மை­யினை ஏற்­ப­டுத்தல் என்­பதன் மூலம் சர்­வ­தேச நிறு­வ­னங்கள் மற்றும் வியா­பா­ரங்­களின் தலை­மை­ய­கங்­களை கவ­ரக்­கூ­டிய ஆற்­றி­லினை நாம் பெற்­றுள்­ளமை தௌிவா­ன­தாகும். ஆசிய கிரிக்கட் பேரவை தனது தலை­மை­ய­கத்­தினை கொழும்பில் தாபித்­தி­ருக்­கின்­றது என்­ப­தனை தொிவித்துக் கொள்­வதில் நான் பெரு­மி­த­ம­டை­கின்றேன். சர்­வ­தேச நிறு­வ­னங்கள் மற்றும் வியா­பார தொழில்­மு­யற்­சிகள் தமது தலை­மை­ய­கங்­களை இலங்­கை­யினை நோக்கி நகர்த்­து­வ­தற்கு ஊக்­க­ம­ளிப்­ப­தற்கு நிறு­வன வரி­க­ளி­லி­ருந்து விலக்­க­ளிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    183. ஏதா­வ­தொரு வரு­டத்தில், முன்­னைய மூன்று வருட சரா­சரி ஏற்­று­மதி புரள்வு வரு­மா­னத்தில் 5 சத­வீதம் வரை ஆடைத் தயா­ரிப்பு மற்றும் வடி­வ­மைப்பில் ஈடு­பட்­டுள்ள வௌிநாட்டு கம்­ப­னி­க­ளுடன் முத­லீடு செய்­வ­தற்கு இலங்­கையில் ஆடைத் தயா­ரிப்புத் தொழிலில் ஈடு­பட்­டுள்ள கம்­ப­னிகள் அனு­ம­திக்­கப்­படும். வௌிநா­டு­களில் தாபிக்­கப்­பட்ட அத்­த­கைய தொழில் முயற்­சி­களின் இலா­பங்கள் மற்றும் வரு­மா­னங்கள் இலங்­கை­யி­லுள்ள முத­லீட்டுக் கம்­ப­னி­யினால் பெறப்­ப­டுதல் வேண்டும். 

    184. இலங்­கைக்கு வௌியே வௌிப்­புற வௌிநாட்டுக் கணக்கின் (ழுர­வ­ற­ய­சன ஐெஎ­ந­ள­வ­அ­நவெ யுஉ­உ­ழ­ரவெ) மூலம் முத­லீடு செய்­துள்ள இலங்­கையில் வதி­யு­மொ­ருவர், அத்­த­கைய முத­லீட்­டுக்­கான மூல­தன வரு­மா­னத்­தினை பெற்­றி­ருப்­பா­ராயின், இலங்­கைக்கு வௌியே­யுள்ள ஒரு­வ­ரினால் மேற்­கொள்­மு­டி­யு­மான முத­லீட்டின் ஆகக் கூடிய பெறு­ம­தி­மீ­தான வரை­ய­றை­யின்றி, அவ்­வாறு பெறப்­பட்ட மூல­தனப் பெறு­ம­தியின் 50 சத­வீதம் வரை குறித்த வௌிநாட்டுக் கணக்­கி­னூ­டாக மீள் முத­லீடு செய்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டுவார். தற்­பொ­ழுது இலங்­கைக்கு வரும் வௌிநாட்­ட­வ­ரொ­ருவர் 15,000 ஐ.அ. டொல­ருக்கு மேற்­பட்ட வௌிநாட்டுச் செலா­வ­ணி­யினை வௌிப்­ப­டுத்­து­வ­தற்கு தேவைப்­ப­டுத்­தப்­ப­டுவார். இவ்­வ­ரை­ய­றை­யினை 40,000 ஐ.அ. டொல­ராக அதி­க­ரிப்­ப­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். கம்­ப­னிகள் தனது ஐந்­தொ­கையின் உறு­தித்­தன்­மைக்­கேற்ப சர்­வ­தேச ரீதி­யாக நிதியைத் திரட்­டு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­படும். அக்­கம்­பனி நாண­ய­மாற்று ஆபத்­தினை தாங்­கிக்­கொள்­ளுதல் வேண்டும். இவ் ஒழுங்­கு­வி­தி­களில் ஏதே­னு­மொன்றை மீறும் சந்­தர்ப்­பத்தில் ரூபா 50 மில்­லியன் தண்­ட­மாக அற­வி­டப்­படும். வங்­கி­யல்­லாத நிதி நிறு­வ­னங்­களின் அத்­த­கைய நிதி திரட்டல் மீது அவை­களின் ஐந்­தொ­கை­யி­லுள்ள வௌிநாட்டு பொறுப்­புக்­க­லா­னது மொத்தச் சொத்­துக்­களின் 35 சத­வீ­தத்­திற்கு மேல் அதி­க­ரிப்­ப­தற்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுப்­பா­டு­களை நீக்­கு­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    185. இலங்கை ரெலிகொம், உள்­நாட்டு இறை­வரித் திணைக்­களம், நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை மற்றும் இலங்கை துறை­முக அதி­கார சபை என்­பன கொழும்பின் நகர வடி­வ­மைப்­பினை மாற்­றக்­கூ­டிய வானு­யர்ந்த சிறப்புக் கட்­டிட கருத்­திட்­டங்­களில் ஏறக்­கு­றைய ரூபா 10 பில்­லி­யனை முத­லீடு செய்­ய­வுள்­ளன. இந்தக் கட்­டி­டங்கள் முத­லீ­டுகள் மற்றும் பொரு­ளா­தார செயற்­பா­டு­க­ளுக்­கான மைய­மாக அமை­யு­மென எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது. இன் நோக்­கத்­திற்­காக உள்­நாட்டு இறை­வரித் திணைக்­களம் மற்றும் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை என்­ப­வற்­றுக்கு 2017 இல் ரூபா 500 மில்­லி­யனை ஒதுக்­கீடு செய்­வ­தற்கு நான் முன்­மொ­ழி­கின்றேன். 

    ஏற்­று­ம­திகள் துறை
    186. கௌரவ சபா­நா­யகர் அவர்­களே, சர்­வ­தேச சந்­தையில் ஏற்­பட்­டுள்ள சவால்­களின் கார­ண­மாக எமது ஏற்­று­மதி வரு­மானம் நெருக்­க­டி­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. எமது ஏற்­று­ம­திகள், உற்­பத்­திகள் மற்றும் சேவைகள் போட்டித் தன்­மை­மிக்­க­ன­வாக தொடர்ந்­தி­ருக்கச் செய்யும் வகையில் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. உலக பெறு­மதி சங்­கி­லி­யுடன் நாம் இணைந்து கொள்ள வேண்­டி­யுள்­ளது. பெறு­மதி சோ்ப்பு, சந்தை அடை­வினை அதி­க­ரித்தல் மற்றும் புத்­தாக்கம் என்­பன இவற்றுள் முக்­கி­ய­மா­ன­வை­யாகும். சிங்­கப்பூர், சீனா, யப்பான், கொரியா, வங்­கா­ள­தேசம் மற்றும் ஆபி­ரிக்­காவில் வளர்ந்­து­வரும் சந்­தை­க­ளுடன் எமது அர­சாங்கம் வர்த்­தக உடன்­ப­டிக்­கை­களை செய்து கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­வதில் கவனம் செலுத்­தி­யுள்­ளது. அதே­போன்று, ஐரோப்­பிய யூனி­ய­னுக்­கான மீன் ஏற்­று­மதித் தடை­யினை நீக்­கு­வதில் நாம் வெற்­றி­ய­டைந்­துள்ளோம். ஜிஎஸ்பி பிளஸ் சலு­கை­யினை மீளப்­பெற்றுக் கொள்­வ­தற்கு ஐரோப்­பிய யூனி­ய­னு­ட­னான எமது கலந்­து­ரை­யாடல்
    ஐரோப்­பா­வுக்­கான எமது ஏற்­று­ம­தி­களை மேலும் அதி­க­ரிக்கச் செய்­யு­மென நான் உறு­தி­யாக நம்­பு­கின்றேன். சர்­வ­தேச வர்த்­த­கத்­திற்­கான தள­மொன்­றினை உரு­வாக்­கு­வ­தா­னது சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கை­க­ளுக்­கான ஏற்­பா­டு­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தாக அமையும். 

    187. உறு­தி­யான நாணயச் செலா­வணி விகிதம் மற்றும் ஆரோக்­கி­ய­மான ஒதுக்கு நிலைமை என்­ப­வற்­றினை விசே­ட­மாகப் பேணு­கின்ற அதே­வேளை பேரண்டப் பொரு­ளா­தார அடிப்­ப­டை­களை மேம்­ப­டுத்­து­வ­தா­னது உறு­தி­யான ஏற்­று­மதி செய­லாற்­று­கை­யினை ஏற்­ப­டுத்த முடி­யு­மாக இருக்கும். எவ்­வா­றா­யினும் வர்த்­த­கத்­திற்­கான சர்­வ­தேச போக்கு தொடர்ந்தும் சிறி­த­ளவு பாதிப்­ப­டைந்­துள்­ள­துடன் ஏற்­று­ம­தி­யா­ளர்­களும் பல்­வேறு சவால் நிறைந்த சூழ்­நி­லை­யினை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். இப்­பின்­ன­ணியில் அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த வகையில், நிச்சயமற்ற நெருக்கடியான நிலைமையில் சிறந்த செயலாற்றுகை மிக்க ஏற்றுமதியாளர்களுக்கு நாம் ஊக்குவிப்புகளை வழங்கவுள்ளோம். 25 சதவீதமான வரி விடுமுறை வழங்கப்படுவதுடன் அவர்கள் 2015 ஆம் ஆண்டினை விட 2017 இல் 15 சதவீதத்தினால் தமது ஏற்றுமதி வருமானத்தினை அதிகரித்திருத்தல் வேண்டும். அவர்களது ஏற்றுமதி வருமானம் 7.5 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுமாயின் 5 சதவீத வரி
    விடுமுறை வழங்கப்படும்.

    188. என்றுமில்லாதவாறு, எக்சிம் வங்கிக்கான தேவை இன்று அதிகரித்துள்ளது. இந்த வகையில் 2017 இலிருந்து இதன் தொழிற்பாடுகளை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். எக்சிம் வங்கியானது அரசாங்கம்
    மற்றும் கைத்தொழிலுடன் இணைந்து ஆரம்ப மூலதனமாக ரூபா 25,000 மில்லியனைக் கொண்டிருக்கும். அரசாங்கத்தின் ஆரம்ப பங்களிப்பாக ரூபா 10,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.
    189. ஏற்றுமதி, சுற்றுலா, வௌிநாட்டு நேரடி முதலீடு மற்றும் ஸ்ரீ லங்கா வியாபாரக் குறியீடு என்பவற்றின் மதிப்பினை அதிகரிக்கச் செய்வதற்கு, உறுதியான, கட்டமைப்புக்குட்பட்ட மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட சர்வதேச சந்தை பிரசாரமொன்றை மேற்கொள்வது முக்கியமானதாகும். இப்பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். 

    190. அதேவேளை, வியாபார உறவுகள் மற்றும் சந்தை அடைவுகளை விருத்திசெய்வதற்கு வசதியளிக்கக் கூடிய வருடாந்தம் இடம்பெறும் கென்ரன் சந்தை, இந்திய மற்றும் ஜேர்மன் சந்தைகள் போன்ற பிரதான வர்த்தக சந்தைகளில் எமது பங்குபற்றுதலினை நாம் உறுதிப்படுத்தவுள்ளோம். 

    191. தனியார் துறை மற்றும் ஏனைய பிரச்சார நிறுவனங்களுடன் இணைந்து ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் இலங்கை தேயிலைச் சபை என்பன இலங்கையின் உற்பத்திகள் மற்றும் சேவைகளை வருடந்தோறும் காட்சிப்படுத்தக் கூடிய கொழும்புச் சந்தை எனப்படும் கண்காட்சியொன்றினை ஏற்பாடு செய்வதற்கு நான் சிபாரிசு
    செய்கின்றேன். இதன் முதலாவது கண்காட்சி 2017 ஒக்டோபரில் இடம்பெறும்.
    இந்நோக்கத்திற்காக ரூபா 50 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். 

    192. கௌரவ சபாநாயகர் அவர்களே, நாட்டிலுள்ள அதிவேகப் பாதைகளில் நன்மையினை நாம்முழுமையாகப் பெற்றுள்ளோம் என நான் நினைக்கவில்லை. அதிவேகப் பாதைகளின் நன்மைகளை பொருளாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதன் மூலம் நாம் அவற்றினை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இந்த வகையில் அதிவேகப் பாதைகளைப் பயன்படுத்தி தனியார் சுதந்திர வர்த்தக வலையங்களை உருவாக்குவதில் அரசாங்கத்தினை பங்காளராக சோ்த்துக் கொள்வதற்கு தனியார் துறைக்கு ஊக்கமளிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். அரசாங்கம் இந்நோக்கத்திற்காக மின்சாரம் மற்றும் நீர் என்பவற்றுடன் காணியினை வழங்கும். இதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். 

    193. அதேவேளை, இறப்பரினை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகள், மருந்துப் பொருட்கள், புடவைத் தயாரிப்பு, கனிப்பொருள், இரசாயணக் கைத்தொழில மற்றும ் தானியங்கி உபகரணக் கைத்தொழில் ஆகிய கைத்தொழில் முயற்சிகளை இலக்காகக் கொண்டு களுத்துறை (பண்டாரகமை), இரத்தினபுரி (எம்பிலிபிட்டிய), புத்தளம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் 4 சுதந்திர வர்த்தக வலையங்களை தாபிப்பதற்கு அரச தனியார் பங்கேற்புகளுக்கு நாம் ஊக்கமளிக்கவுள்ளோம். 

    194. விசேட நிபுணத்துவத்தின் நன்மையினைப் பெற்றுக் கொள்வதற்கு அரச தனியார் பங்கேற்புடன் 15 ஏற்றுமதி கிராமங்களை நாம் தாபிக்கவுள்ளோம். தகவல் தொழில்நுட்பம், றோபோ தொழிற்றுறை, ஆடை வடிவமைப்பு, உயர்தர ஆடை உற்பத்தி மற்றும் படகுத் தயாரிப்பு போன்ற முக்கிய கைத்தொழில்கள் தொடர்பாக எமது முக்கிய கவனத்தினை செலுத்தவுள்ளோம். 

    195. உலகில் சிறந்த கறுவாவினை நாம் உற்பத்தி செய்த போதிலும், 85 சதவீதமான கறுவா அதன் மூலப்பொருள் வடிவிலேயே ஏற்றுமதி செய்யப்படுவதுடன் பெறுமதி சோ்ப்பானது கனிப்பொருள் கைத்தொழில் போன்று இத்துறையிலும் பெரும்பாலும் பூச்சியமாகவே காணப்படுகின்றது. எனவே, ஏற்றுமதிகளின் பெறுமதி சோ்ப்பினை அதிகரிப்பதற்கு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கின்றேன்.
    196. ஆடை மற்றும் புடவைக் கைத்தொழிலாளது 2015 இல் 4,800 மில்லியன் ஐக்கிய அமொிக்க டொலர் வௌிநாட்டுச் செலாவணியை சம்பாதித்த பிரதான தொழிற்றுறையாக காணப்பட்ட போதிலும், 2015 இல் 2,296 மில்லியன் ஐக்கிய அமொிக்க டொலர் பெறுமதியான புடவைகளை இறக்குமதி செய்துள்ளோம். ஆடைக் கொத்தணியொன்று உருவாக்கப்படுதல் வேண்டும். இதில் தனியார் துறையினைச் சோ்ந்த அளவிடல், சாயமிடுதல் மற்றும் முடித்தல் பிரிவுகளும்
    உள்ளடங்கியிருக்கும். இத்துறையில் முதலீடு செய்கின்ற வியாபாரங்களுக்கு முதலீட்டு நிவாரணம் வழங்குவதன் மூலமும் போதிய வசதிகளை ஏற்பாடு செய்வதன் மூலமும் இத்துறைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. இதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஆகக்குறைந்தது 2,000 மில்லியன் ஐக்கிய அமொிக்க டொலர்களை சேமிக்க முடியுமென மதிப்பிடப்பட்டுள்ளது. 

    197. நெருக்கடியான நிலைமைகளின் கீழ் மீள்தயாரிக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட ஆடைகளின் இறக்குமதி மற்றும் மீள்ஏற்றுமதிக்கு ஆடைக் கைத்தொழிற்றுறைக்கு அனுமதிவழங்கப்படும். 

    198. வியாபார ஊக்குவிப்பு செயற்திட்டங்களை விசேடமாக சர்வதேச வியாபார மற்றும் ஊக்குவிப்பு நிகழ்வுகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காக வாணிப திணைக்களத்திற்கு ரூபா 50 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன். 

    அரச உடமை தொழில் முயற்சிகள்
    199. கௌரவ சபாநாயகர் அவர்களே, எமது அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து 2014 ஆம் ஆண்டினைவிட 2016 இல் 50 சதவீதமாக ரூபா 65 பில்லியன் அறவீடுகளையும் பங்கிலாபங்களையும் கொண்ட அரச தொழில் முயற்சிகளின் செயலாற்றுகையினை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் வளங்கள் வீணடிக்கப்படாதிருக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

    200. கௌரவ பிரதம மந்திரியினால் குறிப்பிடப்பட்டவாறு, அரச உடைமை தொழில்முயற்சிகள் உறுதியான வியாபார நிறுவனங்களாக மாறுவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ள விரும்புகின்றோம். இதற்காக வேண்டி அரச தொழில் முயற்சிகள் செலவினத்திற்கேற்ற விலைக் கட்டமைப்பினையும் தொழிற்பாட்டுச் செல்வாக்கினையும் பெற்றிருக்கும். இப்பின்னணியில், பிரதான செயலாற்றுகை சுட்டிகளுக்கேற்ப தொிவு செய்யப்பட்ட அரசதொழில் முயற்சிகளுடன் அரசாங்கம் செயலாற்றுகை ஒப்பந்தங்களில் ஈடுபடும்
    நன்றி - வீரகேசாி
    • Blogger Comments
    • Facebook Comments

    1 comments:

    1. வணக்கம், நீங்கள் ஒரு வணிக மனிதன் அல்லது பெண்? நீங்கள் எந்த இருக்கிறீர்களா
      நான் நிதி அல்லது நிதி தேவை மன அழுத்தம் உங்கள் சொந்த தொடங்கும்
      வணிக? நீங்கள் உங்கள் கடன் தீர்த்து அல்லது செலுத்த கடன் செய்ய வேண்டும்
      உங்கள் பில்கள்? நீங்கள் ஒரு குறைந்த கடன் ஸ்கோர் வேண்டும் மற்றும் இல்லை
      சிரமம் உள்ளூர் வங்கிகள் மற்றும் பிற இருந்து கடன் பெறுவதற்கு
      நிதி நிறுவனங்கள்? நான் நீங்கள் அந்த வாய்ப்பை கடன்கள் தெரிவிக்க விரும்புகிறேன்
      குறைந்த வட்டி விகிதம் 2%, நீங்கள் ஒரு பெறுவதில் ஆர்வமாக இருந்தால் மணிக்கு
      எங்களுக்கு இருந்து கடன், மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்: (MARYAUSTINECREDITFIRM77@GMAIL.COM)

      ReplyDelete

    Item Reviewed: வரவு-செலவு திட்டம் 2017 : நிந்தவூரில் ஆதார வைத்தியசாலை ஸ்தாபிக்க 200 மில்லியன் ரூபா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top