2016 ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்ட யோசனைகளின் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டிற்கான திட்டம்
நீண்டகால பொருளாதார அபிவிருத்தி இலக்குகளையும்
உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களையும் உள்ளடக்கியதாகவும்
உடனடி வருமான அதிகரிப்புக்கான திட்டங்கள் இன்றியும் எதிர்வரும்
2017 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டம் நேற்று நிதியமைச்சரினால்
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அத்துடன் 2016 ஆம்
ஆண்டுக்கான வரவு–செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின்
நீடிப்பாகவே இம்முறை வரவு–செலவுத்திட்டத்தின் யோசனைகள் பெருமளவில்
முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு எவ்விதமான
சம்பள உயர்வும் இம்முறை வரவு – செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட
வில்லை. மாறாக ஒரு சில உணவுப் பொருட்களுக்கான விலைகள்
குறைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் வீடுகளையும் மலையகத்தில் 25 ஆயிரம்
வீடுகளையும் நாடு முழுவதும் 5 இலட்சம் வீடுகளையும்
நிர்மாணிப்பதற்கு 2017ஆம் ஆண்டுக்கான வரவு-–
செலவுத்திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் நாட்டின் ஏனைய
மாகாணங்களுக்கும் இடையில் காணப்படுகின்ற பொருளாதார இடைவெளியை
2020 ஆம் ஆண்டளவில் ஒழிப்பதற்கும்
அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் 2 இலட்சம் ரூபா
பெறுமதியான காப்புறுதித்திட்டமொன்றை
அறிமுகப்படுத்துவதற்கும் 2020 ஆம் ஆண்டளவில் பல்கலைக்கழக
அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக
உயர்த்துவதற்கும் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் ஒரு
மில்லியன் ரூபா வீதம் ஒதுக்குவதற்கும் வரவு-செலவுத் திட்டத்தில்
யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்றுமுதல் அமுலுக்கு வரும் நிலையில்
குறைக்கப்பட்டுள்ளன. நெத்தலி ஒரு கிலோ ஐந்து ரூபாவினாலும் பயறு
ஒரு கிலோ 15ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பருப்பு
ஒருகிலோ 10ரூபாவினாலும் சீனி ஒரு கிலோ .2,ரூபாவினலும்
குறைக்கப்பட்டுள்ளன. மேலும் எரிவாயு (12.5 கிலோ சிலிண்டர்) 25
ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. , மண்ணெண்ணெய் ஒரு லீற்றர்
5ரூபாவினாலும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 5ரூபாவினாலும் விலை
குறைக்கப்பட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நேற்றைய தினம்
பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றிய நிதி அமைச்சர் ரவி
கருணாநாயக்க இந்த விடயங்களை தெரிவித்தார். பிற்பகல் 2
மணியளவில் வரவு-செலவுத் திட்ட உரையை ஆரம்பித்த நிதி அமைச்சர் ரவி
கருணாநாயக்க மாலை 5 மணிவரை உரையைத் தொடர்ந்தார். இடையிடையே ஆளும்
கட்சியினரின் கைத்தட்டல்களுக்கு மத்தியில் நிதி அமைச்சர் ரவி
கருணாநாயக்க வரவு-செலவுத்திட்ட உரையை தொடர்ந்தார்.
அமைச்சர் தொடர்ந்து வரவு-செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றுகையில்
மக்களுக்கு சுமை ஏற்படாதவகையிலான திட்டங்களை எமது
வரவு-செலவுத் திட்டத்தை முன்வைக்கின்றோம். குறிப்பாக வடக்கு,
கிழக்கு மாகாணங்களுக்கும் நாட்டின் ஏனைய மாகாணங்களுக்குமிடையில்
காணப்படுகின்ற பொருளாதார இடைவெளியை 2020 ஆம் ஆண்டில்
அகற்றுவதற்கான திட்டங்களை முன்வைத்திருக்கின்றோம்.
எதிர்காலத்திற்கான அபிவிருத்தி கட்டமைப்பு ஒன்றை
உருவாக்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். எதிர்காலப்பயணமானது
இலகுவானதல்ல. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வழங்கிய
வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம்.
ஓய்வூதியம்
ஓய்வூதியத் திட்டத்தில் பாரிய சிக்கல்நிலை தோன்றியுள்ளது. எனவே ஓய்வூதிய முறைமையை மாற்றியமைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். விசேடமாக பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய முறைமை ஒன்றை முன்னெடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அக்ரகார காப்புறுதித்திட்டம் வாழ்நாள் முழுவதும் கிட்டும்.
ஓய்வூதியத் திட்டத்தில் பாரிய சிக்கல்நிலை தோன்றியுள்ளது. எனவே ஓய்வூதிய முறைமையை மாற்றியமைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். விசேடமாக பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய முறைமை ஒன்றை முன்னெடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அக்ரகார காப்புறுதித்திட்டம் வாழ்நாள் முழுவதும் கிட்டும்.
தேயிலை, இறப்பர்
தேயிலைத்துறையிலான ஏற்றுமதி வருமானத்தை 2020 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். மேலும் சீ.டி.சீ. வகையிலான தேயிலை இறக்குமதியை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம். இறப்பர் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக 900 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்கிறோம்.
தேயிலைத்துறையிலான ஏற்றுமதி வருமானத்தை 2020 ஆம் ஆண்டில் 5 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். மேலும் சீ.டி.சீ. வகையிலான தேயிலை இறக்குமதியை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம். இறப்பர் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக 900 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்கிறோம்.
15 ஆயிரம் கரவைப் பசுக்கள்
இலங்கைக்கு ஒவ்வொரு வருடமும் 81 ஆயிரம் மெற்றிக்தொன் பால் இறக்குமதி செய்யப்படுகின்றது. எனவே 15 ஆயிரம் கரவைப் பசுக்களை இறக்குமதி செய்து பால்பண்ணையாளர்களுக்கு வழங்க இருக்கின்றோம். இதற்கு 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஒவ்வொரு வருடமும் 81 ஆயிரம் மெற்றிக்தொன் பால் இறக்குமதி செய்யப்படுகின்றது. எனவே 15 ஆயிரம் கரவைப் பசுக்களை இறக்குமதி செய்து பால்பண்ணையாளர்களுக்கு வழங்க இருக்கின்றோம். இதற்கு 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி
மன்னார், மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மீன்பிடி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நன்னீர் மீன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மன்னார், மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மீன்பிடி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நன்னீர் மீன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோழி
கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களுக்கு குளிரூட்டிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில் 15 குளிரூட்டிகள் பெற்றுக்கொடுக்கப்படும். இதற்காக 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோழி ஒரு கிலோவின் விலையை 420 ரூபாவாக பேணுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களுக்கு குளிரூட்டிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில் 15 குளிரூட்டிகள் பெற்றுக்கொடுக்கப்படும். இதற்காக 75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கோழி ஒரு கிலோவின் விலையை 420 ரூபாவாக பேணுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
வெள்ளம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இரண்டு குளங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மன்னார் மாவட்டத்தில் தாராபுறம் குளம் மறுசீரமைக்கப்படும். இவற்றுக்காக 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். நாடு முழுவதும் 1500 சிறிய குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இரண்டு குளங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மன்னார் மாவட்டத்தில் தாராபுறம் குளம் மறுசீரமைக்கப்படும். இவற்றுக்காக 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். நாடு முழுவதும் 1500 சிறிய குளங்களை அபிவிருத்தி செய்வதற்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி சீனிக்கு வரி
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 2 வீத செஸ்வரியை அமுல்படுத்தவிருக்கின்றோம். உள்நாட்டு சீனி கைத்தொழிலை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு 2 வீத செஸ்வரியை அமுல்படுத்தவிருக்கின்றோம். உள்நாட்டு சீனி கைத்தொழிலை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி
இதேவேளை கல்வித்துறைக்காக 90 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த வருடத்திற்கான ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. ஆனால் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகளவு நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் 5000 பாடசாலைகளுக்கு கணனிகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. அத்துடன் உயர்தர மாணவர்களுக்கு டெப்கள் வழங்கப்படும்.
இதேவேளை கல்வித்துறைக்காக 90 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த வருடத்திற்கான ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. ஆனால் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகளவு நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் 5000 பாடசாலைகளுக்கு கணனிகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. அத்துடன் உயர்தர மாணவர்களுக்கு டெப்கள் வழங்கப்படும்.
பல்கலைக்கழக
மாணவர்களுக்கு டெப்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. அனைத்து
மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்குகள் ஆரம்பிக்கபப்டவேண்டும்.
மேலும் மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபா காப்புறுதி
செய்துகொடுக்கப்படும். 2020 ஆம் ஆண்டில்
பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களின்
எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரிக்கப்படும். விசேட தேவையுடைய
சிறுவர்களுக்கான கொடுப்பனவு 150 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
மேலும் இலங்கையில் உயர் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு
ஐந்து வருடங்களுக்கான பல்நுழைவு வீசா வழங்கப்படும்.
விவசாயம்
எமது நாட்டின் விவசாயம் வர்த்தக நோக்கில் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக தொழிலுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மேலும் நாட்டில் பயன்படுத்தப்படாது இருக்கும் காணிகளை விவசாயத்திற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது நாட்டின் விவசாயம் வர்த்தக நோக்கில் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக தொழிலுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மேலும் நாட்டில் பயன்படுத்தப்படாது இருக்கும் காணிகளை விவசாயத்திற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து
தனியார் பஸ் சேவையும் 11 மணிவரை முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம். பஸ் மற்றும் ரயில் கட்டணங்களுக்கு கார்ட் கொடுப்பனவு முறையை அறிமுகப்படுத்தவிருக்கின்றோம்.
தனியார் பஸ் சேவையும் 11 மணிவரை முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம். பஸ் மற்றும் ரயில் கட்டணங்களுக்கு கார்ட் கொடுப்பனவு முறையை அறிமுகப்படுத்தவிருக்கின்றோம்.
இதேவேளை அரச
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுச் செல்லும் நோயாளர்களுக்கு
அவர்களுக்கு செய்யப்பட்ட செலவு தொடர்பான செலவுச்சீட்டு ஒன்று
வழங்கப்படவேண்டியது அவசியமாகும்.
ஏற்றுமதி இறக்குமதி வங்கி
சர்வதேச நிறுவனங்கள் இலங்கையில் தலைமையகத்தை நிறுவுதற்கு விரும்பினால் அவற்றுக்கு வரிசலுகை வழங்கப்படும். அத்துடன் இலங்கையில் ஏற்றுமதி, இறக்குமதி வங்கியொன்றை நிறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சர்வதேச நிறுவனங்கள் இலங்கையில் தலைமையகத்தை நிறுவுதற்கு விரும்பினால் அவற்றுக்கு வரிசலுகை வழங்கப்படும். அத்துடன் இலங்கையில் ஏற்றுமதி, இறக்குமதி வங்கியொன்றை நிறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்டோவிற்கு பதில் கார்
முச்சக்கரவண்டிகளுக்கு பதிலாக மின்சார கார்கள், அறிமுகப்படுத்தப்படவுள்ளன. முதல்கட்டமாக 1000 மின்சாரக் கார்கள் கொண்டுவரப்படவுள்ளன. மேலும் பாடசாலை வேன்களுக்குப்பதிலாக 32 ஆசனங்களைக் கொண்ட பாடசாலை பஸ்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இது தொடர்பில் ஒழுங்கு விதிமுறைமை ஒன்று கொண்டுவரப்படும்.
முச்சக்கரவண்டிகளுக்கு பதிலாக மின்சார கார்கள், அறிமுகப்படுத்தப்படவுள்ளன. முதல்கட்டமாக 1000 மின்சாரக் கார்கள் கொண்டுவரப்படவுள்ளன. மேலும் பாடசாலை வேன்களுக்குப்பதிலாக 32 ஆசனங்களைக் கொண்ட பாடசாலை பஸ்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இது தொடர்பில் ஒழுங்கு விதிமுறைமை ஒன்று கொண்டுவரப்படும்.
நாணயம்
நாணயமாற்று கட்டுப்பாட்டு சட்டத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வெளிநாட்டு நிதி பிரகடணமானது 40 ஆயிரம் டொலர்களாக அதிகரிக்கப்படவுள்ளன.
நாணயமாற்று கட்டுப்பாட்டு சட்டத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வெளிநாட்டு நிதி பிரகடணமானது 40 ஆயிரம் டொலர்களாக அதிகரிக்கப்படவுள்ளன.
வீட்டுத்திட்டம்
நாட்டின் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 5 இலட்சம் வீடுகள் அமைக்கப்படும். பெருந்தோட்டத்துறையில் 25 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும். இதற்கு 5ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 10 வருடங்களுக்கு மேல் அரசாங்க வீடுகளில் வசிப்பவர்களுக்கு அந்த வீடு சொந்தமாக வழங்கப்படும்.
நாட்டின் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 5 இலட்சம் வீடுகள் அமைக்கப்படும். பெருந்தோட்டத்துறையில் 25 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும். இதற்கு 5ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 10 வருடங்களுக்கு மேல் அரசாங்க வீடுகளில் வசிப்பவர்களுக்கு அந்த வீடு சொந்தமாக வழங்கப்படும்.
உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம். இதில் பங்கெடுக்குமாறு தனியார்துறைக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
இராணுவம்
இராணுவ வீரர்களின் நலன்புரிக்காக 350 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இராணுவ வீரர்களின் நலன்புரிக்காக 350 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள்
போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களத்திற்கு 150 மில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியவர்களை புனர்வாழ்வு செய்வதற்கு மேலும் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களத்திற்கு 150 மில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியவர்களை புனர்வாழ்வு செய்வதற்கு மேலும் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறை
நீதித்துறையை சுயாதீனமாக கட்டியெழுப்புவதற்கு பிரதம நீதியரசர் உள்ளிட்ட தரப்பிடமிருந்து யோசனைகளை எதிர்பார்க்கிறோம்.
நீதித்துறையை சுயாதீனமாக கட்டியெழுப்புவதற்கு பிரதம நீதியரசர் உள்ளிட்ட தரப்பிடமிருந்து யோசனைகளை எதிர்பார்க்கிறோம்.
சமுர்த்திக்கு பதிலாக ஜன இசுர
வறுமையைப் போக்குவதற்காக சமுர்த்தி வேலைத்திட்டமானது ஜனஇசுர என பெயர்மாற்றம் செய்யப்படுகின்றது. மேலும் நாட்டில் 20 வீதமான மக்கள் 300 ரூபாவிற்கு குறைந்த வருமானத்தை பெறுகின்றனர். இதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வறுமையைப் போக்குவதற்காக சமுர்த்தி வேலைத்திட்டமானது ஜனஇசுர என பெயர்மாற்றம் செய்யப்படுகின்றது. மேலும் நாட்டில் 20 வீதமான மக்கள் 300 ரூபாவிற்கு குறைந்த வருமானத்தை பெறுகின்றனர். இதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிராம சேவகர் பிரிவுக்கு 1 மில்லியன்
நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 1 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கப்படும்.
நாட்டின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 1 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கப்படும்.
விலை குறைப்பு
ஒரு சில உணவுப் பொருட்களுக்கான விலைகளும் நேற்றுமுதல் அமுலுக்கு வரும் நிலையில் குறைக்கப்பட்டுள்ளன. நெத்தலி ஒரு கிலோ ஐந்து ரூபாவினாலும் பயறு ஒரு கிலோ 15ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பருப்பு ஒருகிலோ 10ரூபாவினாலும் சீனி ஒரு கிலோ .2,ரூபாவினலும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் எரிவாயு (12.5 கிலோ சிலிண்டர்) 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. , மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 5ரூபாவினாலும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 5ரூபாவினாலும் விலை குறைக்கப்பட்டுள்ளன
ஒரு சில உணவுப் பொருட்களுக்கான விலைகளும் நேற்றுமுதல் அமுலுக்கு வரும் நிலையில் குறைக்கப்பட்டுள்ளன. நெத்தலி ஒரு கிலோ ஐந்து ரூபாவினாலும் பயறு ஒரு கிலோ 15ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பருப்பு ஒருகிலோ 10ரூபாவினாலும் சீனி ஒரு கிலோ .2,ரூபாவினலும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் எரிவாயு (12.5 கிலோ சிலிண்டர்) 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. , மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 5ரூபாவினாலும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 5ரூபாவினாலும் விலை குறைக்கப்பட்டுள்ளன
தொலைத் தொடர்பு வரி அதிகரிப்பு
தொலைத்தொடர்புத் துறைக்கான (lavy) வரியானது 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புத் துறைக்கான (lavy) வரியானது 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீரகேசாி -
0 comments:
Post a Comment