• Latest News

    November 29, 2017

    செல்பி மோகத்தால் புகை­யி­ரத பாதையில் 24 பேர் பலி..!

    செல்பி மோகத்தால் புகை­யி­ரத பாதையில் இவ்­வ­ருடம் ஜன­வரி மாதம் முதல் ஒக்­டோபர் மாத  காலப்­ப­கு­தி வரை 24 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக வீதி  பாது­காப்புக்­கான தேசிய பேர­வை தெரிவித்துள்ளது.

    செல்பி படம் எடுத்­து­க்கொண்­டி­ருந்த வேளையில் புகை­யி­ரதத்துடன் மோதியதில் இந்த விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக வீதி  பாது­காப்புக்­கான தேசிய பேர­வையின் ஒருங்­கி­ணைப்­பாளர் புத்­திக பிரதாப் தெரி­வித்தார்.

    வீதி பாது­காப்பு தேசிய பேரவை   இல்­லாத கார­ணத்தால் கடந்த வருடம் இதை­யொத்த சம்­ப­வங்கள் குறித்த   தர­வு­களை ஒப்­பிட்டு பார்க்க முடி­ய­வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் இளைஞர் யுவ­தி­க­ளிடம் செல்பி மோகம் அதி­க­ரித்து காணப்­ப­டு­வது கவலைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார்.  
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: செல்பி மோகத்தால் புகை­யி­ரத பாதையில் 24 பேர் பலி..! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top