• Latest News

    November 24, 2017

    சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை (வீடியோ)

    சவுதியில் இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு விசாரணைக் குழுவினர் இது வரைக்கும் 200 பேரை கைது செய்து  விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

    ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்களில் சொத்தில் 70 வீதத்தை சவுதி அரசாங்கத்திற்கு எழுதிக் கொடுத்தால் அவர்களை விடுவிக்க முடியும் என்று இளவரசர் முகம்மது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

    கைது செய்யப்பட்டவர்கள் சவுதியில் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் ஆடம்பர ஹோட்டலில் சிறைக் கைதி போல் வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் உள்ள ஹோட்டலுக்கு பிபிசி குழுவினர் சென்றனர். அவர்களின் குரல்களை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    தங்களின் விடுதலைக்கு பெரும் தொகைப் பணத்தை வழங்குவதற்கு 95 வீதமானவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    தடுத்து வைக்கப்பட்டுள்ள நாட்கள் குறித்து சவுதி அரசாங்கத்திடம் கேள்விகள் எழுமென்று பிபிசி தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை (வீடியோ) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top