• Latest News

    November 25, 2017

    ஊடகங்களுக்குத் தம்மை வீரர்களாக சித்தரிப்பவர்கள் நாட்டிற்குத் தேவையில்லை - நிகவெரட்டியவில் ஜனாதிபதி

    ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகவெரட்டியவில் இன்று நடைபெற்றது.

    இதன்போது, மூளையைப் பாவித்து வேலை செய்பவர்களே நாட்டிற்குத் தேவை எனவும் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுடன் செயற்படுபவர்களும் ஊடகங்களுக்குத் தம்மை வீரர்களாக சித்தரிப்பவர்களும் நாட்டிற்குத் தேவையில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

    அரசியல் ஞானமுள்ள, முதிர்ச்சியுள்ள அரசியல்வாதிகள் சிலர் தலைமைத்துவத்தை ஏற்று, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

    ”மக்கள் எமக்கு ஒப்படைத்த பொறுப்புக்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். அதனால் தேவையற்ற வகையில், பொறுப்புக்களில் இருந்து விலகி, பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, ஊடகங்களின் ஊடாக விமர்சனங்களை முன்வைத்து, தம் மீதே சேறு பூசிக்கொண்டு பின்னர் அழ வேண்டாம் என நான் அனைவருக்கும் மிகவும் தௌிவாக இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்கின்றேன்,” என ஜனாதிபதி வலியுறுத்திக் கூறினார்.

    மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், மிக விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற தேவையே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊடகங்களுக்குத் தம்மை வீரர்களாக சித்தரிப்பவர்கள் நாட்டிற்குத் தேவையில்லை - நிகவெரட்டியவில் ஜனாதிபதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top