• Latest News

    November 20, 2017

    வாகனங்களுக்கு எரிபொருள்… எப்படி நிரப்ப வேண்டும் !

    ங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா….? அதற்கு முன், கீழே உள்ள தகவல்களைப் பற்றிச் சிந்தியுங்கள். அனைத்து பெட்ரோல் நிலையங்களும், தங்கள் சேமிப்புத் தொட்டிகளை நிலத்துக்கு அடியில்தான் பதித்து வைத்திருக்கின்றன.
    நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே, எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது.
    எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள். பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்ப நிலையில் இருந்தால், அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப் படுவதில்லை.
    அதேபோல, உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை, எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள். அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட, பெட்ரோல் வேகமாக ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில், மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக, உள்ளே உள்ள பெட்ரோலுக்கும், காற்று மண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும்.
    ஆனால், வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.
    அதேபோல, நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள், அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை கூட பாதிக்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வாகனங்களுக்கு எரிபொருள்… எப்படி நிரப்ப வேண்டும் ! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top