• Latest News

    December 07, 2017

    கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவை வழங்குவதை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தல்

    கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் அவர்களுக்கான சம்பளநிலுவை வழங்குதல் என்பனவற்றை துரிதப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.ரி.எம்.நிசாம் மற்றும் மாகாண உதவிக்கல்விச்செயலாளர் ஆகியோருடன் இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்று கலந்துரையாடியுள்ளது.

    இதன்போது இந்த விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    ஆசிரியர்களின் பதவியுயர்வு மற்றும் அதற்கான சம்பளநிலுவை வழங்குதல் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ம் திகதி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

    வர்த்தமானி வௌியாகி மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நேற்றைய சந்திப்பின் போது கல்வி திணைக்கள அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவை வழங்குவதை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top