• Latest News

    February 05, 2019

    சிறுவர் பூங்காவில் ஊஞ்சல் உடைந்து இருவர் மரணம் - 05 பேர் கைது!

    சிறுவர் பூங்காவில் ஊஞ்சலின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த 13 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார். குறித்த அசம்பாவிதம் வெயாங்கொட – நய்வலவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் நேற்று சம்பவித்தது. இந்த அனர்த்தம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த சிறுவர் பூங்காவை பராமரித்துவந்த 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெயாங்கொட - நய்வலவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் நேற்று ஊஞ்சலின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்ததில் 47 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் குறித்த பெண்ணின் மகள் படுகாயமடைந்தார். இதன்போது படுகாயமடைந்த 13 வயதான சிறுமி, சிகிச்சைகளுக்காக கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறுவர் பூங்காவில் ஊஞ்சல் உடைந்து இருவர் மரணம் - 05 பேர் கைது! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top