அமேசான் காடுகளில் இருந்து எடுக்கப்பட்ட அரிய வகை மூலிகை என அடிக்கடி நாம்
விளம்பரங்களை பார்த்து இருப்போம், அந்த அமேசான் காடுகளில் தான் பெரும்
காட்டுத்தீ பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக நாட்டையே உலுக்கி வருகிறது அமேசான் காடுகளை
ஏற்பட்டுள்ள காட்டு தீ தான், காட்டுத்தீ பயங்கரமாக பரவி அமேசன் காடு
எரிந்து கொண்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அங்கு வாழும் உயிரினங்கள்
அழிந்து கொண்டிருக்கிறது.
உலகில் 20% ஆக்சிஜன் பல மில்லியன் கணக்கான உயிரினங்கள் மற்றும் தாவரங்களை
இந்த உலகிற்கு தந்துள்ளது அமேசான் காடு, இங்கு உள்ள உயிரினங்கள் கருகி
இறந்து உள்ளதால் அதை பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைத்துள்ளது.
அமேசன் காடு இரண்டு மூன்று வாரங்களாக எரிந்துகொண்டிருக்கிறது இதை உலக
நாடுகள் பார்த்து பெரும் கவலையில் இருக்கிறார்கள், மிருகங்கள் இறந்து
கொண்டிருப்பதை சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள், மேலும் காட்டில் வாழும்
உயிரினங்கள் எறிந்த நிலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்
வைரல் ஆகி வருகின்றன,
இந்தப் புகைப்படங்களைப் பார்த்து உலக மக்கள் அனைவரும் வருத்தம்
அடைந்துள்ளார்கள். மேலும் இயற்கை வளங்களை மீண்டும் திரும்பப் பெற வேண்டும்
என்று வேண்டிக் கொள்கிறார்கள்.






0 comments:
Post a Comment