• Latest News

    August 30, 2019

    எனக்கு ஒழுக்காற்று நடவடிக்கையா..? என்ன நடக்குதென்று பாருங்கள் - எச்சாிக்கிறார் அத்துரலிய ரத்ன தேரர்

    ஐக்கிய தேசிய கட்சி தமக்கு எதிராக எடுக்கவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் தமக்கு அச்சமில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
    பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவும் என்று ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
    எனினும் தமக்கு அது குறித்த எழுத்து மூல அறிவுறுத்தல்கள் எவையும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்று அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
    எவ்வாறாயினும், தமக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது பெரிய விடயம் இல்லை எனவும், அது ஒரு உபாயம் மாத்திரமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டால், என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எனக்கு ஒழுக்காற்று நடவடிக்கையா..? என்ன நடக்குதென்று பாருங்கள் - எச்சாிக்கிறார் அத்துரலிய ரத்ன தேரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top