• Latest News

    March 22, 2020

    தற்போதைய சூழலில் தேர்தல் பிரச்சாரத்தை அல்லது கட்டாய தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது :

    கொரோனா வைரஸ் (COVID 19) பரவுவதால் நாட்டில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக மக்கள் இடையே ஏற்படும் அச்சத்தையும் குழப்பத்தையும் கருத்தில் கொண்டு ஜனகன் விநாயகமூர்த்தி தேர்தலை ஒத்திவைப்பது பற்றியும் இலங்கையின் சட்ட கட்டமைப்பை மாற்ற வேண்டிய முக்கியத்துவத்தையும் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

    பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரிவு 24 (3), No. 01 of 1981 என்பது தேர்தலை ஒத்திவைக்க பிறப்பிக்கப்படும் உத்தரவு. இந்த கோரிக்கை நேரடியாக தேர்தல் ஆணையரிடம் செய்யப்படுகிறது, மேலும் ஆவணத்தில் தேர்தல் ஆணையருக்கு கூடுதலாக இரண்டு கூடுதல் தேர்தல் குழு உறுப்பினர்களும் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டாலும் அத்தகைய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியினால்  தேர்தலை ஒத்திவைப்பதற்கான வாய்ப்பை உருவாக்காது. தேர்தல் ஆணையம் ஒரு சில மாவட்டங்களில் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கலாமே அன்றி நாடு முழுவதும் தேர்தலை தாமதப்படுத்த முடியாது. இருப்பினும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு சட்ட கட்டமைப்பிற்கான ஒரு செயற்கை நடைமுறையை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி வர்த்தமானியை வெளியிடுவதன் மூலம் நாடு முழுவதும் தேர்தலை  ஒத்திவைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
    இது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டாலும், அது நீதிமன்றங்களால் கேள்விக்குட்படுத்த வாய்ப்புள்ளது. நாட்டில் நிலவும் இப்படிப்பட்ட குழப்ப சூழ்நிலை காரணமாக கட்டமைப்பை சவால் செய்வதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. எனவே பின்வருவனவற்றை நிறைவேற்றுவதற்கான அதிக வாய்ப்பு அரசியலமைப்பின் 155வது பிரிவின் கீழ் அவசரகால நிலை ஜனாதிபதியால் கொண்டுவரப்பட்டு பொது பாதுகாப்பு கட்டளை (PSO) செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, நாட்டின் ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை அறிவித்து, 24 (3)வது பிரிவை திருத்தி, தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலை ஒரே வர்த்தமானி மூலம் ஒத்திவைக்க அதிகாரம் அளிக்கலாம் அல்லது அந்த அதிகாரத்தை தனக்குத் தானே எடுத்து தேர்தலை ஒத்திவைக்கலாம். இருப்பினும் இந்த விதி இலங்கையின் அரசியலமைப்பிற்கு எதிராக செயல்பட அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்பு தொடர்பாக சாமானியனும் அறிந்திருக்க வேண்டிய அவசியத்தினை மேலும் ஜனகன் சுட்டிக்காட்டினார்.
    1. மே 14க்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான அவசியம்

    மே 14, 2020 அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டிருப்பதால் அதற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி மீண்டும் கூட்டத்தொடரை ஜூன் 3 க்கு முன்னர் கண்டிப்பாக நடாத்தவேண்டும் அதாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குள். அவ்வாறு செயல்படுத்தப்பட்டால் அதன்படி தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்.

    2. ஜூன் 03க்குப் பிறகு தேர்தல்களை ஒத்திவைத்தல்
    பிரச்சினை மிகவும் வெளிப்படையானது. அத்தகைய நிபந்தனைக்கு எந்தவொரு சட்ட விதிகளும் இல்லை என்பது.

    இதை அடைவதற்கான ஒரே வழி “doctrine of necessity” வழியாகும். doctrine of necessity என்பது சட்டரீதியான கூடுதல் நடவடிக்கைகளை விவரிக்கப் பயன்படுகிறது, அவை ஒழுங்கை மீட்டெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை நீதிமன்றம் மூலமாக மட்டுமே செயல்படுத்த முடியும்.
    3. சட்ட கட்டமைப்பைத் திருத்த வேண்டுமா?
    கலைக்கப்பட்ட பாராளுமன்றத்திற்குப் பிறகு நடைமுறை அடிப்படையில் சட்ட கட்டமைப்பை திருத்த முடியாது. அதே நேரத்தில், 2020 ஜூன் 3 க்குப் பிறகு தேர்தலை நடத்துவதற்கான சட்ட கட்டமைப்பை அரசாங்கம் தடுத்தால், doctrine of necessity கீழ் நீதிமன்ற ஒப்புதல் பெறுவது ஒரு விருப்ப தேர்வாகும்.

    இவ்வாறு சட்ட கட்டமைப்பில் தற்காலிக திருத்தத்தை உயர்நீதிமன்றம் அனுமதித்தால் அது கலைக்கப்பட்ட பாராளுமன்றத்திற்குப் பிறகு மீண்டும் கூட்டத்தொடரின் போது அவசியத்தின் கோட்பாட்டின் கீழ் கொண்டு வரப்படலாம். 2020 ஜூன் 3 க்குப் பிறகு தேர்தலை நடத்துவதற்கு பயனற்ற தடையை நீக்க முடியும்.

    எனவே தேர்தலை ஒத்திவைக்க எங்களுக்கு ஒரு வழி இருப்பதால் தற்போதைய அசாதாரண நிலைமை காரணமாக நாட்டு மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் கவலையின் மத்தியில் ஒரு தேர்தல் பிரச்சாரத்தை அல்லது கட்டாய தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது.

    நம்மை தற்காத்துக்கொள்ள இலங்கையர் அனைவரும்  கொவிட் 19 க்கு எதிராக போராட உலகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். தேர்தல் அளவுருக்களின் அடிப்படையில் தீர்மானிப்பதை விட இந்த கொடிய நோயின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் இதற்கான காலக்கெடு அங்கீகரிக்கப்பட வேண்டும்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தற்போதைய சூழலில் தேர்தல் பிரச்சாரத்தை அல்லது கட்டாய தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது : Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top