• Latest News

    April 10, 2020

    24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் இனங் காணப்படவில்லை

    நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

    இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த 54 பேர் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

    தற்போது 222 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாட்டில் இதுவர‍ை 190 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், இன்று மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் இனங் காணப்படவில்லை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top