• Latest News

    April 10, 2020

    கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 50 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பினர்

    கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு நபர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
    அதன்படி, 50 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
    இதேவேளை, 190 பேர் இதுவரை கொரோனா நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 
    இதேவேளை, தற்போது 132 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. 
    கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையிலும், வெலிகந்த மற்றும் முல்லேரியா ஆதார வைத்திய சாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

    அதேபோல் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 250 க்கும் அதிகமானவர்கள் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். ,
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 50 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பினர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top