கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம்
சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுககு தனது நன்றிகளை தெரிவித்துக்
கொள்ளவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் Tedros Adhanom Ghebreyesus தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இதனை கூறியுள்ளார்.
இலங்கை
ஜனாதிபதியும் தானும் இது குறித்து முக்கிய தொலைபேசி உரையாடலை
மேற்கொண்டதாகவும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை உட்பட பிராந்தியத்தில்
ஏற்படக் கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் தொடர்பாக இதன் போது
கலந்துரையாடியதாகவும் Tedros Adhanom Ghebreyesus தனது டுவிட்டர்
பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


0 comments:
Post a Comment