• Latest News

    July 11, 2021

    கிளிநொச்சியில் ரவுடிகளை அடித்து நெருக்கிய ஊர் மக்கள்

     கிளிநொச்சி கோணாவில் பகுதியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ள பெப்பர் ஸ்பிரே, இரும்புக்கம்பிகள் சகிதம் வந்த ரவுடிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.'

    தாக்குதல் மேற்கொள்ளும் முகமாக நேற்றய தினம் நள்ளிரவு வேளை 6 மோட்டார் சைக்கிள்களில் வந்த ரவுடி கும்பல்களை உள்ளுர் மக்கள் விரட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

    இதனை எதிர்பார்க்காத ரவுடிகள் வாகனங்களை கைவிட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகின்றது.

    கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிளிநொச்சியில் ரவுடிகளை அடித்து நெருக்கிய ஊர் மக்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top