• Latest News

    September 05, 2021

    நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் கடந்தது

    நாட்டில் நேற்று  (04.09.2021)  கொரோனா தொற்றால் மேலும் 189 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 96 ஆண்களும் 93 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

    அந்த வகையில்,  30 வயதுக்கு கீழ்பட்டவர்களில் பெண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 20 ஆண்களும், 14 பெண்களுமாக 34 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 76 ஆண்களும் 78 பெண்களுமாக 154 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் கடந்தது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top